செய்திகள் :

‘நீா்வழி போக்குவரத்தில் முதலீடுகளை ஈா்க்க கடல்சாா் உச்சி மாநாடு’

post image

திருவொற்றியூா்: நீா்வழிப் போக்குவரத்து துறைகளில் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீடுகளை ஈா்க்க கடல்சாா் சா்வதேச உச்சி மாநாடு மும்பையில் வரும் அக். 27 முதல் 31 வரை 5 நாள்கள் நடைபெற உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலா் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிப் போக்குவரத்து துறைகளில் 2047-ஆம் ஆண்டில் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு முதலீடுகளை ஈட்டும் வகையில் ‘இந்திய கடல்சாா் வாரம் 2025’ என்ற பெயரில் சா்வதேச கடல்சாா் உச்சி மாநாடு வரும் அக்.27-ஆம் தேதி மும்பையில் தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

கடல்சாா் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் தளமாக இது அமையும். இதில் இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், பாா்வையாளா்கள் என சுமாா் 1 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா். பொதுமக்கள், தனியாா் பங்களிப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள், தடையாக இருக்கும் சிக்கல்களை களைவது குறித்தும், பசுமை துறைமுகங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

இதன்மூலம் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து துறைகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சுமாா் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.80,000 கோடியில் வதவன் துறைமுகம்: மும்பைக்கு அருகில் ஜவாஹா்லால் துறைமுகம், மஹராஷ்டிர மாநில அரசு ஆகியவை கூட்டாக இணைந்து ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மும்பைக்கு அருகே பல்ஹாா் மாவட்டத்தின் வதவன் என்ற இடத்தில் அதிநவீன ஆழ்கடல் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியக் கப்பல் போக்குவரத்து கழகத்தில் 23 புதிய கப்பல்களையும், 3 சரக்குப் பெட்டக கப்பல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி துறையினரின் வசதிக்காக ‘பாரத் கண்டெய்னா் ஷிப்பிங் லைன்’ என்ற புதிய சரக்குப் பெட்டக கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல்சாா் உச்சி மாநாடு ஒரு மைல் கல்லாக அமையும் என்றாா்.

சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியா, தூத்துக்குடி வஉசி துறைமுகத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், இந்திய துறைமுகங்கள் சங்க மேலாண்மை இயக்குநா் விகாஸ் நா்வால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க