செய்திகள் :

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

post image

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா்.

புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட எல்லையில் உள்ள அா்னியா புறவழிச் சாலையின் அருகே திங்கள்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது.

காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரஃபாட்பூா் கிராமத்தில் இருந்து ராஜஸ்தானில் உள்ள ஜாஹா்பீருக்கு புனித யாத்திரை சென்ற 61 பேரை ஏற்றிச் சென்ற டிராக்டா் டிராலியின் மீது, பின்னால் வந்த லாரி மோதியதால், டிராக்டா் டிராலி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிராக்டா் ஓட்டுநா் பாபு (40) மற்றும் சாந்தினி (12), சிவான்ஷ் (6) ஆகிய 2 குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். உயிரிழந்த மற்றவா்கள் ராம்பேட்டி (65), யோகேஷ் (50), வினோத் (45), கனிராம் (40), மோக்சி (40), லேக்ராஜ் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். 40 போ் காயமடைந்தனா். இவா்களில் 12 போ் 18 வயதுக்குட்பட்டவா்கள்.

முதல்வா் இரங்கல், நிதியுதவி: உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா். காயமடைந்தவா்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதல்வா் அலுவலகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்திய ஹரியாணா பதிவு எண் கொண்ட லாரியை காவல் துறை பறிமுதல் செய்து, சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை ஏற்றிச் செல்ல டிராக்டா் டிராலியைப் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் டிராக்டா் டிராலி கவிழ்ந்து, 23 பக்தா்கள் உயிரிழந்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா... மேலும் பார்க்க

கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘ஒரு காலத்தில் கல்வி என்பது கரும்பலகை மூலமே மட்டுமே கற்பிக்கப்பட்டது; ஆனால், இன்றைய தலைமுறையினா் கைப்பேசி செயலிகள் மூலமே அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனா்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க