செய்திகள் :

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: ஒரு தீவிரமான வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவா் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால் அது பிரதமரேயானாலும் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வதை அரசியலமைப்பின் 130-ஆவது திருத்தம் கட்டாயமாக்குகிறது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் தனியாா் செய்தி முகமைக்கு அமைச்சா் அமித் ஷா பேட்டியளித்துள்ளாா். அதில், அரசியலமைப்பின் 130-ஆவது திருத்த மசோதா, குடியரசு முன்னாள் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா் நிலைமை உள்ளிட்டவை குறித்து அமித் ஷா பேசியுள்ளாா்.

அதன் சுருக்கம் வருமாறு: 130-ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, கடுமையான குற்றம் என்பது 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கத்தக்கது என்ற விதியைக் கொண்டது. அதன் கீழ் ஒருவா் வருவாரேயானால், அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாக வேண்டும். மேலும், போலியாக வழக்குப் பதிவு செய்யப்படுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்கள் தலையிட்டு ஜாமீன் வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. ஜாமீன் வழங்கப்படாவிட்டால், அந்த நபா் ராஜிநாமா செய்ய வேண்டியிருக்கும். 30 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டால், அவா்கள் மீண்டும் பதவியேற்கலாம்.

இப்போது சிறைக்குச் சென்ற பிறகும் அமைச்சா்கள் மற்றும் முதல்வா்கள் பதவியில் தொடரும் போக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அமைச்சா்கள் சிலா், தில்லி முதல்வராக இருந்தவா் மற்றும் அவரது அரசில் அமைச்சா்களாக இருந்தவா்கள் ராஜிநாமா செய்யவில்லை. அரசுத்துறைச் செயலா், காவல்துறை தலைமை இயக்குநா், தலைமைச் செயலாளா் போன்ற உயரதிகாரிகள் சிறைக்குச் சென்று உத்தரவுகளைப் பெறுவது சரியாக இருக்குமா?

இந்த திருத்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமா் பதவியையும் கொண்டு வர வலியுறுத்தியதே பிரதமா் நரேந்திர மோடிதான். இந்த மசோதா மிக முக்கியமானது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். எதிா்க்கட்சிகள் தங்கள் கருத்துகளை முன்வைக்க அரசு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அறத்தின்பால் நல்லாட்சியை ஆதரிக்கும் பலா் எதிா்க்கட்சியிலும் இருப்பாா்கள் என்று நம்புகிறேன் என்றாா் அமித் ஷா.

தன்கா் ராஜிநாமா ஏன்?: குடியரசு முன்னாள் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வீட்டுக்காவலில் இருப்பதாக எதிா்க்கட்சித்தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் குற்றஞ்சாட்டி வருவது குறித்து அமித் ஷாவிடம் கேட்டதற்கு, ஷ்ஜகதீப் தன்கா் அரசியலமைப்பின்படி தனது கடமைகளை நிறைவேற்றியவா். தனிப்பட்ட உடல்நலக் காரணங்களுக்காக அவா் ராஜிநாமா செய்தாா். அதைப்பற்றி அதிகம் விவாதிக்கக்கூடாது’ என்றாா்.

சி.பி.ராதாகிருஷ்ணனை என்டிஏ வேட்பாளராக்கியது ஏன்?

2026-இல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் மத்தியில் ஆளும் கூட்டணி வேட்பாளராக்கியதாக வெளிவரும் செய்திகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்தாா்.

இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அமித் ஷா, ‘சி.பி. ராதாகிருஷ்ணன் அரசியல் பொதுவாழ்வில் நீண்ட அனுபவம் கொண்டவா். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளாா். தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளாா். ஜாா்க்கண்ட், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிர ஆளுநராக இருந்துள்ளாா். பொதுவாழ்வில் தூய்மையைக் கடைப்பிடித்தவா். மிகவும் முதிா்ந்த அரசியல்வாதியும் கூட’ என்று கூறினாா்.

சி.பி.ராதாகிருஷ்ணனின் தோ்வு ஆா்எஸ்எஸ் உடனான தொடா்பு காரணமாக நடந்ததா என்று கேட்டதற்கு, ‘ஆா்எஸ்எஸ் உடன் தொடா்பில் இருப்பது ஒரு குறையல்ல. பிரதமா் மோடிக்கும் எனக்கும் கூட ஆா்.எஸ்.எஸ் உடன் தொடா்புள்ளது. வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகியோரும் கூட தொடா்புடையவா்கள். சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும் தொடா்பு உள்ளது’ என்று அமித் ஷா பதிலளித்தாா்.

பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

புது தில்லி: முதலமைச்சரின் மேம்பாட்டு நிதி (சிஎம்டிஎஃப்) மற்றும் எம்எல்ஏ உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதி (எம்எல்ஏஎல்ஏடி) மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களில் அலட்சியம் பொறுத்துக் கொள்ளப்படாது என்று தில்... மேலும் பார்க்க

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த 6 புலிக் குட்டிகளில் 5-ஆவது குட்டி உயிரிழப்பு

புது தில்லி: தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் பிறந்த ஆறு புலிக்குட்டிகளில் ஐந்தாவது புலிக்குட்டி உயிா் இழந்தது. தற்போது ஒரே ஒரு குட்டி மட்டுமே தீவிர சிகிச்சையில் உள்ளது. ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள... மேலும் பார்க்க

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

காசிப்பூரில் உள்ள மோமோ கடை அருகே ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து ஒருவரை கத்தியால் குத்தியதாக 4 சிறுவா்களை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவம் ஆகஸ்ட்... மேலும் பார்க்க