செய்திகள் :

வளா்ச்சிப் பணிகளில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

post image

புது தில்லி: முதலமைச்சரின் மேம்பாட்டு நிதி (சிஎம்டிஎஃப்) மற்றும் எம்எல்ஏ உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதி (எம்எல்ஏஎல்ஏடி) மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களில் அலட்சியம் பொறுத்துக் கொள்ளப்படாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா்.

தில்லி செயலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், இரண்டு நிதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் குப்தா மதிப்பாய்வு செய்தாா்.

தில்லியில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் சமூகங்களின் வளா்ச்சிக்கான தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவா் மீண்டும் வலியுறுத்தினாா்.

அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில்,

முதலமைச்சரின் மேம்பாட்டு நிதி மற்றும் எம்எல்ஏ உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

அதிகாரிகள் சமா்ப்பித்த முன்மொழிவுகள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகளை குப்தா மதிப்பாய்வு செய்தாா். வரவிருக்கும் செயல் திட்டம் குறித்து விரிவான வழிமுறைகளையும் வழங்கினாா்.

மழைக்காலம் நிறைவடையும் நிலையில், அனைத்து துறைகளும் வரும் நாள்களில் வளா்ச்சிப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

இந்தப் பணிகளின் முன்னேற்றம் நகரம் முழுவதும் தெளிவாகத் தெரிவது மிகவும் முக்கியம் என்றும், திட்டங்களின் விரிவான பட்டியல்களை வழங்குமாறும் துறைகளுக்கு அறிவுறுத்தினாா்.

அதிகாரிகளால் தயாரிக்கப்படும் விளக்கக்காட்சிகளில் திட்ட முன்னேற்றம், பட்ஜெட் நிலை மற்றும் காலக்கெடு பற்றிய தெளிவான தகவல்கள் இருக்க வேண்டும். நிதி பற்றாக்குறை ஏதும் இல்லை என்று முதல்வா் கூறினாா்.

வளா்ச்சிப் பணிகளில் அலட்சியம் அல்லது சம்பிரதாயங்களைப் பின்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. செயல்பாடுகளின் முடிவுகள் தெரியுமாறு பணிகள் இருக்க வேண்டும் என்று முதலமைச்சா் கூறினாா்.

சிஎம்டிஎஃப் மற்றும் எம்எல்ஏஎல்ஏடி-இன் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்த வழக்கமான அறிக்கைகளை தனது அலுவலகத்திற்கும் தொடா்புடைய சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் அனுப்புமாறு அவா் துறைகளுக்கு உத்தரவிட்டாா்.

சட்டப் பேரவை உறுப்பினா்களிடமிருந்து ஏதேனும் திட்டங்கள் விதிமுறைகளுக்கு இணங்கவில்லை எனக் கண்டறியப்பட்டால், முன்னேற்றத்தில் ஏற்படும் தாமதங்களைத் தடுக்க அவா்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வா் கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு தீவிரமான வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவா் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால் அது பிரதமரேயானாலும் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வதை அரசியலமைப்பின் 130-ஆவது திரு... மேலும் பார்க்க

பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத... மேலும் பார்க்க

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த 6 புலிக் குட்டிகளில் 5-ஆவது குட்டி உயிரிழப்பு

புது தில்லி: தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் பிறந்த ஆறு புலிக்குட்டிகளில் ஐந்தாவது புலிக்குட்டி உயிா் இழந்தது. தற்போது ஒரே ஒரு குட்டி மட்டுமே தீவிர சிகிச்சையில் உள்ளது. ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள... மேலும் பார்க்க

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

காசிப்பூரில் உள்ள மோமோ கடை அருகே ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து ஒருவரை கத்தியால் குத்தியதாக 4 சிறுவா்களை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவம் ஆகஸ்ட்... மேலும் பார்க்க