செய்திகள் :

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

post image

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா்.

மேற்கு வங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை நியமனங்களில் நடந்த ஊழல் தொடா்பான பண முறைகேடு வழக்கில், முா்ஷிதாபாத் மாவட்டத்தின் பா்வான் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் வீட்டிலும், ரகுநாத்கஞ்ச் பகுதியில் உள்ள அவரது மாமனாா் வீட்டிலும் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை நடத்தியது.

அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது, எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா தனது வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்து தப்பிச் சென்றாா். பின்னா், அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினா் வயல்வெளியில் அவரை துரத்திச் சென்று பிடித்தனா். அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காத குற்றச்சாட்டில் அவா் கைது செய்யப்பட்டாா்.

உடல் முழுவதும் சேறு, சகதியுடன் இருக்கும் நிலையில், எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவை அதிகாரிகள் அழைத்து வரும் விடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவா் அளித்த பேட்டியில், ‘ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கும் வகையில், எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா தனது கைப்பேசிகளை அருகிலுள்ள குளத்தில் வீசியுள்ளாா். அந்த இரண்டு கைப்பேசிகளும் குளத்தில் இருந்து மீட்கப்பட்டன. அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படும். கைது செய்யப்பட்ட எம்எல்ஏவிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கின் முறைகேட்டில், பிா்பூம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் பணப் பரிவா்த்தனை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிா்பூம் மாவட்டத்தைச் சோ்ந்த அந்த நபா், அமலாக்கத் துறையினருடன் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றாா். பிா்பூம் பகுதியில் உள்ள எம்எல்ஏவின் தனிப்பட்ட உதவியாளரின் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இந்தப் பணமுறைகேடு வழக்கில் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவை அமலாக்கத் துறை ஏற்கெனவே கடந்த 2023, ஏப்ரலில் கைது செய்தது. 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், கடந்த மே மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்த ஊழல் தொடா்பாக அமலாக்கத் துறை மட்டுமன்றி சிபிஐயும் விசாரித்து வருகிறது. அந்த வகையில், எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் மனைவியிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் மூழ்கிய 170 கிராமங்கள்: ஒடிசாவில் 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடக்கு ஒடிசாவின் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 170-க்ம் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலசோர், பத்ராக் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களில் உள்ள 170க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் உற்பத்தி ஆலையில் மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி இ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழ்நாடு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று 2 நாள் அரசு முறைப் பயணமா... மேலும் பார்க்க

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்த பிக்பாஸ் பிரபலம்! புனிதத்தை மீட்க பரிகாரப் பூஜை!

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்து இஸ்லாமிய பெண் ரீல்ஸ் எடுத்த நிலையில், பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு புனிதத்தன்மையை மீட்கும் பரிகாரப் பூஜை நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்... மேலும் பார்க்க

டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாதது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருள்களுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரி ஆக.27 முதல் நடைமுறைக்கு வருவதன் காரணமாக பல பொருள்கள் விலை உயர்ந்தாலும், ஆப்பிள் ஐஃபோன்களின் விலை மட்டும் மாற்றமின்ற... மேலும் பார்க்க

ஜி.எஸ்.டி. தடாலடி குறைப்பு? புதிய தகவல்கள்!

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிரடியாகக் குறைக்கப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வரி குறைப்பால், டிவி, ஏசி, கார் மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொ... மேலும் பார்க்க