செய்திகள் :

பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்

post image

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலம் இருந்தால் அதனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருக்கிறார்.

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்புதூர்‌ பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

இந்த விழாவிற்கு பின்பு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி பஞ்சப்பூரில் எனக்கு சொத்து இருந்தால் அரசோ, மக்களோ எடுத்துக் கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் கையெழுத்து போடுகிறேன். எனக்கும் என் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அங்கு இடம் இல்லை. நான் முதல்வர் குடும்பத்துடன் சண்டை போடவில்லை. இணக்கமாக உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

அதிமுக கூட்டத்திற்கு வந்தவருக்குத்தான், உடம்பு சரியில்லை என ஆம்புலன்ஸை அழைத்தார்கள். ஆனால், ஆம்புலன்ஸை ஓட்டி வந்தவர்களை போட்டு அடிக்கிறார்கள் இதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஆம்புலன்ஸை தாக்குவது ரொம்ப தப்பு. முதல்வர் பேசும் பொழுது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் பேச்சை நிறுத்தி உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பிவிடுவார். ஆனால் அதிமுக பிரச்சனை செய்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

எல்லா செய்திகளும் மக்களை சென்றடைகிறது. யார் எப்படி நடந்து கொண்டிருந்தாலும் மக்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே உங்களுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி நேற்று மேற்கு தொகுதி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் பேசியுள்ளார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த நேரு, எங்களுக்கு சொந்தமான நிலம் இருந்தால் பொதுமக்கள் எடுத்துக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் எடுத்துக் கொள்ளலாம். நகராட்சி எடுத்துக் கொள்ளலாம். அங்கு எங்கு 300 ஏக்கர் நிலம் உள்ளது. எனக்கு எந்த நிலம் இருந்தாலும் அதனை அரசுக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ளலாம்.எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் கையெழுத்து போட்டுத் தருகிறேன். பழனிசாமியே வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளலாம்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தங்களை பாதுகாத்துக் கொள்ள தான் கூட்டணி வைத்துள்ளார் என நாங்கள் ஏற்கனவே பேசி வருகிறோம். இப்பொழுதும் சொல்கிறோம். அவர்களைப்போல எங்களை நினைக்கிறார் என்று அமைச்சர் நேரு கூறினார்.

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

யுபிஐ, உணவு டெலிவரி... ஓடிபி எண் கேட்கத் தடையில்லை! - மதுரைக் கிளை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடிபி பெறுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ஸ்விக்கி, சொமெட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள்... மேலும் பார்க்க

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து கடத்திச் சென்ற வேனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை பிடித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் ... மேலும் பார்க்க

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை!

தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்னையில் ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் கம்பம் அருகே காமய கவுண்டன்பட்ட... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 9,355-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 74,840-க்கும் விற்பனை ... மேலும் பார்க்க

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

குழந்தைகளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டதால் எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகா்ப்புற அரசு உதவி பெறும் பள... மேலும் பார்க்க