செய்திகள் :

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 24,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பருமழை தொடங்கியது முதல், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதனால், தற்போது வரை நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், மழை பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

பஞ்சாப் மாகாணத்தில், அடுத்த 48 மணிநேரத்தில் கனமழையானது மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டமானது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சிந்து, செனாப், ரவி மற்றும் சட்லூஜ் ஆகிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீர்நிலைகளின் அருகிலும் தாழ்வானப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு, பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ், நேற்று (ஆக.25) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், அங்கு வசித்த சுமார் 24,000-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்படுவது வழக்கமாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும், பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் சுமார் 1,700-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

Around 24,000 people have been evacuated in Pakistan's Punjab province as a high-level flood warning has been issued.

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

ஈரான் அரசுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 அக்டோபரிலும், மெல்ப... மேலும் பார்க்க

பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவியும் அடுத்த பட்டத்து இளவரசியுமான கேத் மிடில்டன், பொன்னிற தலைமுடியுடன் பல்மோரல் அருகே தென்பட்டுள்ளார்.ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்மோரல் அர... மேலும் பார்க்க

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!

யேமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையினர், இஸ்ரேல் மீது முதல்முறையாக கிளஸ்டர் குண்டுகள் மூலம... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

ஆஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசு இயக்கியுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிண்டி நகரத்தில் இருந்த உணவகம் மற்று... மேலும் பார்க்க

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் 25% வரிவிதிப்பு நாளை (ஆக.27) முதல் அமலுக்கு வருகிறது.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரிகளை வ... மேலும் பார்க்க

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.முன்னதாக, இரு நாடுகள் சண்டையில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டத... மேலும் பார்க்க