செய்திகள் :

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

post image

ஜிம்பாப்வே ஜாம்பவான் பிரண்டன் டெய்லர் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளதை அந்த அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஜிம்பாப்வே தலைநகர் ஹாராரேயில் துவங்குகிறது.

இந்தத் தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வேயின் ஒருநாள் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் ஜிம்பாப்வே ஜாம்பவான் பிரண்டன் டெய்லர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிரண்டன் டெய்லர், இந்திய தொழிலதிபரிடமிருந்து 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பெற்றுக் கொண்டதை 2022 ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டார். இதனால், அவருக்கு ஐசிசியின் ஊழல் மற்றும் ஊக்கமருந்து தடையின்படி 3.5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த நிலையில், பிரண்டன் டெய்லர் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பவிருக்கிறார்.

வெள்ளைப் பந்து ஃபார்மட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவரான பிரண்டன் டெய்லர், இதுவரை 205 போட்டிகளில் விளையாடி 35.55 சராசரியுடன் 6684 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்ச 145 ரன்களுடன் 11 சதங்கள் விளாசியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய அப்போதைய கேப்டனான பிரண்டன் டெய்லர், அந்தப் போட்டியில் 138 விளாசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

ZIM vs SL: Brendan Taylor returns to Zimbabwe ODI squad ahead of Sri Lanka series

இதையும் படிக்க : ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓ’ரூர்க் காயம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில் ஓ'ரூர்க், முதுகில் ஏற்பட்ட காயம் கார... மேலும் பார்க்க

3 பிஎச்கே படத்தை ரசித்தேன்! சச்சின்

3 பிஎச்கே திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியி... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!

ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குக... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: இந்திய வம்சாவளி ஜதீந்தர் சிங் தலைமையில் ஓமன் அணி!

ஆசியக் கோப்பைக்கான ஓமன் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியின் கேப்டனாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜதீந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆ... மேலும் பார்க்க

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

பிசிசிஐ மற்றும் டிரீம் 11 இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ... மேலும் பார்க்க

புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து... சுவாரசியங்கள் சில!

செதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவரை பற்றிய பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ள விநோதமான சாதன... மேலும் பார்க்க