செய்திகள் :

3 பிஎச்கே படத்தை ரசித்தேன்! சச்சின்

post image

3 பிஎச்கே திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார்.

இதில் சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சொந்த வீட்டை வாங்க ஒரு நடுத்தர குடும்பம் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் படம் பதிவுசெய்திருந்தது.

தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகியிருக்கும் நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பார்த்து ரசித்ததாக தெரிவித்துள்ளார்.

ரெடிட் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சச்சின் பதிலளித்துக் கொண்டிருந்த நிலையில், ”நீங்கள் எப்போது திரைப்படம் பார்ப்பீர்கள், உங்களுக்கு பிடித்த படம் எது?” என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்திருக்கும் சச்சின், நேரம் கிடைக்கும்போது படம் பார்ப்பது உண்டு, சமீபத்தில் 3 பிஎச்கே மற்றும் அட தம்பாய்ச்சா நாய் திரைப்படங்களை கண்டு ரசித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

சச்சினின் பதிவை பகிர்ந்துள்ள இயக்குநர் ஸ்ரீ கணேஷ், "நன்றி சச்சின் சார். நீங்கள் எனது சிறுவயது ஹீரோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Indian cricket legend Sachin Tendulkar has said that he enjoyed watching the movie 3 BHK.

இதையும் படிக்க : குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்த பிக்பாஸ் பிரபலம்! புனிதத்தை மீட்க பரிகாரப் பூஜை!

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓ’ரூர்க் காயம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில் ஓ'ரூர்க், முதுகில் ஏற்பட்ட காயம் கார... மேலும் பார்க்க

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

ஜிம்பாப்வே ஜாம்பவான் பிரண்டன் டெய்லர் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளதை அந்த அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!

ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குக... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: இந்திய வம்சாவளி ஜதீந்தர் சிங் தலைமையில் ஓமன் அணி!

ஆசியக் கோப்பைக்கான ஓமன் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியின் கேப்டனாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜதீந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆ... மேலும் பார்க்க

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

பிசிசிஐ மற்றும் டிரீம் 11 இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ... மேலும் பார்க்க

புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து... சுவாரசியங்கள் சில!

செதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவரை பற்றிய பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ள விநோதமான சாதன... மேலும் பார்க்க