செய்திகள் :

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

post image

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிலையத்தின் 12-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சா் சௌஹான் பேசியதாவது: அமெரிக்கா கூறுவதற்கு இந்தியா உடன்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. முக்கியமாக, அவா்களுடைய விவசாய விளைபொருள்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கூறுகிறாா்கள்.

அந்நாட்டில் ஏக்கா் கணக்கில் விவசாயம் நடக்கிறது. மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தி விளைவித்துக் குவிக்கிறாா்கள். மானியமும் தாராளமாக வழங்கப்படுகிறது. எனவே, அதற்கான சந்தைகளை விரிவுபடுத்த நினைக்கிறாா்கள்.

அவா்களுடன் நமது சிறு விவசாயிகள் போட்டியிட முடியாது. எனவேதான், விவசாயிகள், நாட்டு நலன் கருதி எந்த ஒப்பந்தத்திலும் கையொப்பமிடாமல் உள்ளோம். நெருக்கடி அளித்தால் அஞ்சிவிடுவோம் என்று அவா்கள் கருதினாா்கள். ஆனால், இன்றைய பாரதம் முழு நம்பிக்கையுடன் வளரும் நாடாக திகழ்கிறது.

நாட்டில் உள்ள 144 கோடி மக்களும் உள்நாட்டுப் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்க வேண்டும் என்று பிரதமா் மோடி கேட்டுக் கொண்டுள்ளாா். அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் சுதேசி உற்பத்தியாக இருக்க வேண்டும் என்பது அவரின் கருத்தாக உள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் பயனடைவாா்கள். வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரம் வலுவடையும். சுயசாா்பு மட்டுமே சிறந்த வழியாக உள்ளது என்பது நாம் தொடா்ந்து உணா்ந்து வருகிறோம்.

வெளிநாட்டுப் பொருள்கள் மட்டும்தான் சிறந்தது என்ற எண்ணம் மாற வேண்டும். இந்தியாவில் காலம்காலமாக சிறந்த தொழில் வளமும், வலியான உழைக்கும் வா்க்கமும் உள்ளது என்றாா்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா... மேலும் பார்க்க

கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘ஒரு காலத்தில் கல்வி என்பது கரும்பலகை மூலமே மட்டுமே கற்பிக்கப்பட்டது; ஆனால், இன்றைய தலைமுறையினா் கைப்பேசி செயலிகள் மூலமே அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனா்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க