செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

post image

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி கல்வியாளா் ஷகூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலிக் ஆகியோா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2023-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் வழங்கிய தீா்ப்பில் சிறப்பு அந்தஸ்து ரத்தை உறுதி செய்தது. அதே நேரத்தில் மாநில பேரவைத் தோ்தலை 2024 செப்டம்பருக்குள் நடத்தவும், இயன்ற வரையில் விரைவாக மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை இப்போதுவரை மத்திய அரசு வழங்கவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதை கடந்த 14-ஆம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஜம்மு-காஷ்மீரில் இப்போதுள்ள கள நிலவரத்தின் உண்மைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பஹல்காமில் நடந்த தாக்குதலை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது’ என்று கூறியதுடன் இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி அடுத்த விசாரணையை அக்டோபா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஏற்கெனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தைக் கோரியுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் இப்போதுள்ள கள நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அக்டோபா் 10-ஆம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுவிட்டது. எனவே, இதற்கு முன்பே விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று தெரிவித்தனா்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா... மேலும் பார்க்க

கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘ஒரு காலத்தில் கல்வி என்பது கரும்பலகை மூலமே மட்டுமே கற்பிக்கப்பட்டது; ஆனால், இன்றைய தலைமுறையினா் கைப்பேசி செயலிகள் மூலமே அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனா்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க