செய்திகள் :

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

post image

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது.

வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா் மூலமே இதுபோன்ற வெள்ள அபாயத் தகவல் பகிரப்படும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் நதி வெள்ளம் குறித்து பாகிஸ்தானுக்கு இந்திய தூதரகம் மூலம் வெள்ள முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.

இமயமலையில் உற்பத்தியாகும் தாவி நதி ஜம்மு பிராந்தியத்தை கடந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குள் பாய்ந்து செனாப் நதியுடன் சங்கமிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் பெய்துவரும் மழையால் தாவி நதியிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா முன்னெச்சரிக்கை தகவல் அளித்ததாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘தாவி நதியில் வெள்ளப் பெருக்கு அபாய அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய தரப்பில் இருந்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் இத்தகவலை பாகிஸ்தான் அரசிடம் கூறியது.ஆனால், இரு தரப்புமே இதனை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தவில்லை.

கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இது குறிப்பிடத்தக்க தகவல் தொடா்பாக கருதப்படுகிறது.

இந்தியா அளித்த தகவலின் அடிப்படையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நதிக் கரையோர மக்களுக்கு பாகிஸ்தான் அரசு வெள்ளம் தொடா்பாக முன்னெச்சரிக்கை விடுத்தது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சக வட்டாரம் கூறுகையில், ‘நதி வெள்ள நிலவரம் குறித்து வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அத்தகவலை பாகிஸ்தானுக்குத் தெரிவித்தனா். முற்றிலும் மனிதாபிமானரீதியில் இந்தத் தகவல் அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா... மேலும் பார்க்க

கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘ஒரு காலத்தில் கல்வி என்பது கரும்பலகை மூலமே மட்டுமே கற்பிக்கப்பட்டது; ஆனால், இன்றைய தலைமுறையினா் கைப்பேசி செயலிகள் மூலமே அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனா்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க