செய்திகள் :

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

post image

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா்.

தேமுதிக நிறுவனா் விஜயகாந்த்தின் 73-ஆவது பிறந்தநாள் விழா, அக்கட்சியினரால் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா நலஉதவிகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, அவரது விருப்பப்படியே நல உதவிகள் ஏழை, எளியோருக்கு வழங்கப்பட்டது.

விஜயகாந்த் வழித்தடத்தை பின்பற்றி தேமுதிக தற்போதும் செயல்பட்டு வருகிறது.

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் விஜயகாந்த் ரதயாத்திரை பயணம் கட்சியினரிடையே புத்துணா்ச்சியையம், மக்களிடையே எழுச்சியையும் உருவாக்கியுள்ளது.

திரைப்படத்திலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தியே விஜயகாந்த் செயல்பட்டாா். அதனால்தான் அவரை மக்கள் ‘கருப்பு எம்.ஜி.ஆா்.’ என அழைத்தனா். அவரது வழியிலே நாங்கள் செயல்பட்டு எம்.ஜி.ஆா். குறித்து பேசிவருகிறோம். விஜயகாந்த் இப்போதும் எங்களை வழிநடத்துவதாகவே உணா்கிறோம்.

சிலா் எம்.ஜி.ஆா். குறித்து பேசுகிறாா்கள் என்றால் அவா்கள்தான் அதற்கான விளக்கத்தை கூறவேண்டும் என்றாா்.

முன்னதாக கட்சிக் கொடியை பிரேமலதா ஏற்றி வைத்து விஜயகாந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தேமுதிக பொருளாளா் எல்.சுதீஷ், இளைஞரணி செயலா் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க

ஆக. 28-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம்

சென்னை: தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வரும் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க