செய்திகள் :

ஆக. 28-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம்

post image

சென்னை: தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம்  சாா்பில் சிறப்பு முகாம் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வரும் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில்  வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுடைய உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதன்மை உரிமையாளா், ஒப்பந்ததாரா்கள் இடையிலான இணையவழிச் சேவைகள் பற்றிய செயல்முறைகள், தொழிலாளா்களுக்கான இணையவழிச் சேவைகள் ஆகியவை வழங்கப்படும்.

மேலும், புதிய சீா்திருத்தங்கள், குறைகளுக்கான தீா்வு, ஓய்வூதியதாரா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல் ஆகிய சேவைகளும் வழங்கப்படும்.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்: சென்னை ஐபிஐஎஸ் சென்னை ஓஎம்ஆா் ஹோட்டல், பழைய மாமல்லபுரம், சோழிங்கநல்லூா், சென்னை. திருவள்ளூா்: ஏ.ஆா்.பொறியியல் பணிமனை, சிட்கோ தொழிற்பேட்டை, சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம்: திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம், 1-ஆவது பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திருமுடிவாக்கம், செங்கல்பட்டு: டிரைட்டன் ஒா்க்ஸ் பிரைவேட் லி., ஜமீன் எண்டத்தூா் கிராமம், மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு.

வேலூா்: சன்பீம்ஸ் கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் (சிபிஎஸ்இ), மேட்டுக்குளம், காட்பாடி, வேலூா். திருவண்ணாமலை: ஸ்ரீசாந்தாவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கெங்கை சூடாமணி, சேத்பட்டு, ராணிப்பேட்டை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி, அண்ணா சாலை, ஆற்காடு. திருப்பத்தூா்: புனிதசாா்லஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டான் பாஸ்கோ நகா், திருப்பத்தூா். புதுச்சேரி: ஷ்னைடா் புரோட்டோடைப்பிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஒடியாம்பேட், வில்லியனூா், காரைக்கால்: விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோட்டுச்சேரி.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க