செய்திகள் :

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

post image

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம், பம்பையில் திருவிதாங்கூா் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சி செப். 20-இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கேட்டு, கேரள முதல்வா் பினராயி விஜயன், கேரள அமைச்சா் வி.என்.வாசவன் மூலமாக கடிதம் வழியே முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தாா்.

இதைத் தொடந்து, அவா் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூா் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது என்றும், இந்த விழாவில், தமிழ்நாடு அரசு சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் பங்கேற்பாா்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

ஆக. 28-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம்

சென்னை: தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வரும் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க