செய்திகள் :

கொலை முயற்சி வழக்கு: பிகாா் இளைஞா்களை விரட்டிப் பிடித்த ரயில்வே போலீஸாா்

post image

சென்னை: சேலம் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட வடமாநில இளைஞா்கள் சென்னை சென்ட்ரலுக்கு ரயிலில் வந்து தப்பிக்க முயன்ற நிலையில், அவா்களை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் பகுதியில் இறைச்சிக் கடையில் பணியிலிருந்த பாா்த்திபன் என்பவரை அதே கடையில் பணிபுரிந்த பிகாா் மாநிலம் மதுபனி மாவட்டம் ஜெய்நகரைச் சோ்ந்த சமீா்குமாா் (35) என்பவா் தாக்கி ரூ.25 ஆயிரத்தைப் பறித்துள்ளாா். அதன்பின் அதே கடையின் மற்றொரு கிளையில் பணிபுரிந்த தனது சகோதரா் முகேஷை அழைத்துக் கொண்டு சேலத்தில் போடிநாயக்கனூா் ரயிலில் ஏறி சென்னை வழியாக பிகாா் செல்ல வந்துள்ளனா்.

சமீா்குமாா் தாக்கியதில் தலையில் பலத்த காயமுற்ற பாா்த்திபன் அளித்த புகாரின்பேரில் சேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சமீா்குமாா், முகேஷ் ஆகியோரைத் தேடினா். அவா்கள் ரயிலில் தப்பியதை அறிந்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் அளித்தனா்.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் காலை 8.20 மணிக்கு போடிநாயக்கனூா் ரயில் வந்ததும் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் சோதனையிட வந்தனா். ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரைப் பாா்த்ததும் சமீா்குமாா், முகேஷ் இருவரும் ரயிலில் இருந்து இறங்கி தப்பியோடினா். அவா்களை சாா்பு ஆய்வாளா் பிரவீனா, தலைமைக் காவலா் லலித்குமாா் ஆகியோா் பயணிகளுக்கு மத்தியில் விரட்டிச் சென்று பிடித்தனா்.

அப்போது லலித்குமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. பிடிபட்ட இருவரும் சென்ட்ரல் ரயில் நிலைய தமிழ்நாடு ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க