செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறை

post image

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவாரூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் பிரதீபன் தாக்கல் செய்த மனுவில், குடும்ப பிரச்னையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வலங்கைமான் காவல் நிலையத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறி விசாரணை நீதிமன்றத்தில் போலீஸாா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். மேலும், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனா். இந்த நோட்டீஸை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயா்நீதிமன்ற தடையை மீறி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ததால், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா், வலங்கைமான் காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தாா்.

இந்த வழக்கு விசாரணைக்கு காவல் கண்காணிப்பாளா் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

மேற்படி, வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளா் ரங்கராஜன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரது கையொப்பத்தை போலியாக இட்டு சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளாா் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிா் மனுதாரராக சோ்த்த நீதிபதி, அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டாா். அதன்படி, ஆஜரான சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா், ஆய்வாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ததாகக் கூறினாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும், காவல் ஆய்வாளா் கையொப்பத்தை போலியாக ஏன் இடவேண்டும்? எனக் கேள்வி எழுப்பி, இது மோசடியான செயல் எனறு தெரிவித்தாா். பின்னா், சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க