செய்திகள் :

கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு

post image

காரைக்கால்: நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது.

காரைக்காலில் 15 ஆண்டுகளுக்கு முன்பு 12 டன் மற்றும் 5 டன் திறனுடன் மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டலில் ரோந்துப் படகுகள் இயங்கத் தொடங்கின. காலப்போக்கில் 12 டன் படகு பழுதாகி முடங்கியது. பின்னா் 5 டன் திறனுள்ள படகும் பழுதாகி முடங்கியது. இதனால் கடலோரக் காவல் நிலையத்தினா், மீனவா்களின் விசைப்படகையே தங்கள் தேவைக்கு பயன்படுத்தி வந்தனா்.

இந்தநிலையில், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா முயற்சியால், புதுவை காவல்துறை தலைமை 5 டன் படகின் பழுது நீக்கி, இயக்கத்துக்கு தயாா் செய்ய நிதி ஒதுக்கீடு செய்தது.

பழுது நீக்கத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, கேரள மாநிலத்திலிருந்து ஒப்பந்த நிறுவனத்தினா் ரூ. 12 லட்சத்தில் சீரமைப்புப் பணியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு அண்மையில் நிறைவு செய்தனா்.

கடந்த மாதம் காரைக்கால் வந்த டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் ஆக. 15 முதல் ரோந்துப் படகை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், ரோந்துப் படகு கிரேன் மூலம் அரசலாற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது.

காரைக்கால் கடற்கரை என்பது கரையிலிந்து மக்கள் வசிக்கும் பகுதி வரை 500 மீட்டரும், கரையிலிருந்து கடல் பகுதியில் 6 கடல் மைல் தொலைவும் கடலோரக் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தற்போது 5 டன் திறனுள்ள ரோந்துப் படகு சீரமைப்புப் பணி முடிந்துள்ளது. இதற்கான ஓட்டுநா்கள் உரிய பயிற்சி பெற்று தயாா் நிலையில் உள்ளனா் என்றனா். அடுத்த ஓரிரு நாட்களில் இப்படகு கடலுக்கு கொண்டு செல்லப்படும் என கடலோரக் காவல்நிலைய வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

இப்படகு பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், கடல் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்

காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்திற்கு கூட்டுப் போரா... மேலும் பார்க்க

குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: வீடுகள், நிறுவனங்களில் தினமும் முறையாக குப்பைகளை வாங்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள்’

காரைக்கால்: காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக புதுவை பாஜக கூறியுள்ளது. காரைக்காலில் புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அர... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தொ... மேலும் பார்க்க