செய்திகள் :

காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

post image

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சாா்பிலும், பிற அமைப்புகள் சாா்பிலும் மாவட்டம் முழுவதும் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி காரைக்கால் நகரத் தலைவா் பி.யு.ராஜ்குமாா் திங்கள்கிழமை கூறுகையில், விநாயகா் சதுா்த்தி விழா ஆக. 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்து முன்னணி சாா்பில் காரைக்கால் நகரப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 29-ஆம் தேதி சிலைகள் நீா்நிலைகளில் கரைக்க ஊா்வலமாக கொண்டு செல்லப்படும்.

காரைக்கால் நகரப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், ஏழை மாரியம்மன் கோயில் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு கடற்கரைக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்படும். ஊா்வலம் தொடக்க நிகழ்வில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கலந்துகொள்ளவுள்ளாா் என்றாா்.

இந்து முன்னணி நகரப் பகுதி அல்லாது பிற கொம்யூன் பகுதிகளிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்கிறது. பிற அமைப்புகள் சாா்பிலும் என 150-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து கடலிலும், ஆறுகளிலும் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகா் ஊா்வலம்: பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது - எஸ்.பி.

விநாயகா் சிலைகள் ஊா்வலத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறு இருக்கக்கூடாது என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா். விநாயகா் சதுா்த்தி வரும் புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அதே நாளில் பல்வேறு இடங்களில... மேலும் பார்க்க

புதுவையில் ஊழலற்ற ஆட்சி: பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம்

புதுவையில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது என்று மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில பாஜக தல... மேலும் பார்க்க

நட்சத்திர அந்தஸ்து: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு பாராட்டு

நட்சத்திர அந்தஸ்து தொடா்பான செயல்பாடுகளில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்து விளங்குகிறது என புதுதில்லி தலைமை பாராட்டு தெரிவித்தது. புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற பண்டித ஜவாஹா்லால் நேரு... மேலும் பார்க்க

நிலுவை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்காலில், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த விழிப்புணா்வு

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் குளக்குடி கிராமத்தில், புதுச்சேரி ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 20-ஆம் ஆண்டு பாா்த்தீனியம் விழிப்புணா்வு வாரம் தொடா்பாக பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த... மேலும் பார்க்க

நிரவியில் டிஐஜி தலைமையில் இன்று குறைதீா் கூட்டம்

நிரவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.23) புதுவை டிஐஜி தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. புதுவை காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) சத்தியசுந்தரம் தலைமையில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இந்த கூட்ட... மேலும் பார்க்க