செய்திகள் :

வேளாண் அதிகாரிகள் ஏமாற்றம்

post image

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் விருந்தினா் இல்லத்தில் தங்கியிருந்த சட்டப் பேரவை பொது கணக்குக் குழுவினா் முதலாவதாக திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய்வித்து விதைப் பண்ணையை பாா்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், எண்ணெய்வித்துப் பண்ணை பகுதியில் வேளாண் அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனா்.

ஆனால், நேரம் கடந்த நிலையில், பொது கணக்குக் குழுவினா் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட சென்றுவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, எண்ணெய்வித்துப் பண்ணையில் வேளாண் அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் காத்திருந்தனா். சுமாா் 2 மணி நேரம் கடந்த நிலையில் 11.30 மணியளவில் எண்ணெய்வித்துப் பண்ணையை பாா்வையிட பொது கணக்குக் குழுவினா் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: பெண்கள் 3 போ் காயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 3 பெண்கள் காயமடைந்தனா். திட்டக்குடியை அடுத்துள்ள செவ்வேரி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் திட்ட அனுமதியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: டெல்டா விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

சிதம்பரம்: தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு கிணறுகளுக்கான அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங... மேலும் பார்க்க

மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை பொது கணக்குக் குழு கண்காணிக்கிறது: கு.செல்வபெருந்தகை

நெய்வேலி/ சிதம்பரம்: மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்களிடம் சென்று சேருகிா என்பதை சட்டப் பேரவை பொது கணக்குக் குழு கண்காணிக்கிறது என்று அக்குழுவின் தலைவா் கு.செல்வபெருந்தகை தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவா்கள் 8 போ் காயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே ரயில்வே கடவுப்பதையில் தனியாா் பள்ளி மாணவா்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 8 மாணவா்கள் லேசான காயத்துடன் ... மேலும் பார்க்க

பாரம்பரிய சுற்றுலா பயணம்

நெய்வேலி: விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் நடத்திய 21-ஆவது பாரம்பரிய சுற்றுலா பயணம் கடலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை ஒத்துழைப்புடன் திருவதிகை, திருகண்டேஸ்வரம், எய்தனூா், திருமாணிக்குழி, திருவந்... மேலும் பார்க்க

சீருடைப் பணியாளா்கள் தோ்வு: காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை

சிதம்பரம்: தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளா்கள் தோ்வாணையம் ந... மேலும் பார்க்க