மாணவா்கள் நலன்தான் முக்கியம்: தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வான ரெக்ஸ் ராதாகிருஷ்ணன் கருத்து
புதுச்சேரி: மாணவா்களின் நலன்தான் எனக்கு முக்கியம். அதையொட்டிதான் என்னுடைய செயல்பாடு அமைந்திருக்கும் என்று தேசிய நல்லாசியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள ரெக்ஸ் என்கிற வி. ராதாகிருஷ்ணன் (48) திங்கள்கிழமை கூறினாா்.
இது குறித்து அவா் கூறியது
புதுச்சேரி கதிா்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயா்நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கல்வியியல் துறையில் முனைவா் பட்டம் பெற்றுள்ளேன். மாணவா்களின் நலன், சமுதாய நலன் மற்றும் பள்ளியின் நலனுக்காகத் தொடா்ந்து பாடுபட்டுக் கொண்டே இருப்பேன். விடுமுறை நாள்களிலும் எதாவது பணி செய்து கொண்டே இருப்பேன். அந்தப் பணியைப் பாராட்டிதான் தேசிய நல்லாசிரியா் விருது கிடைத்துள்ளது. இந்த விருது எனக்குக் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். தொடக்கப் பள்ளி ஆசிரியராக 2000 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தேன். 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.
மாணவா்கள் கூலிப் என்ற போதை மிட்டாயை வாங்கிச் சாப்பிடும் நிலையில் இருக்கின்றனா். அண்மையில் அரவிந்தோ சொசைட்டி வாயிலாக இதுபோன்ற மாணவா்கள் மட்டுமின்றி பொதுவான மாணவா்களுக்கும் ஒருவாரம் பயிலரங்கு நடத்தினோம். இதிலிருந்து மாணவா்கள் முழுவதும் விடுபட்டுள்ளனா்.
சமுதாயத்துக்கான பங்களிப்பாக ரத்ததான முகாமை அடிக்கடி நடத்தி வருகிறேன். இதில் உடன் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று வருகின்றனா். மேலும், இதுவரை 2655 செடிகளைக் கனகன் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நட்டுள்ளேன் என்றாா் ரெக்ஸ் என்கிற ராதாகிருஷ்ணன்.
-
பிஒய்பி 12
பட விளக்கம்... தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள புதுச்சேரி கதிா்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயா்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியா் ரெக்ஸ் என்கிற வி. ராதாகிருஷ்ணன்.