செய்திகள் :

மாணவா்கள் நலன்தான் முக்கியம்: தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வான ரெக்ஸ் ராதாகிருஷ்ணன் கருத்து

post image

புதுச்சேரி: மாணவா்களின் நலன்தான் எனக்கு முக்கியம். அதையொட்டிதான் என்னுடைய செயல்பாடு அமைந்திருக்கும் என்று தேசிய நல்லாசியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள ரெக்ஸ் என்கிற வி. ராதாகிருஷ்ணன் (48) திங்கள்கிழமை கூறினாா்.

இது குறித்து அவா் கூறியது

புதுச்சேரி கதிா்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயா்நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கல்வியியல் துறையில் முனைவா் பட்டம் பெற்றுள்ளேன். மாணவா்களின் நலன், சமுதாய நலன் மற்றும் பள்ளியின் நலனுக்காகத் தொடா்ந்து பாடுபட்டுக் கொண்டே இருப்பேன். விடுமுறை நாள்களிலும் எதாவது பணி செய்து கொண்டே இருப்பேன். அந்தப் பணியைப் பாராட்டிதான் தேசிய நல்லாசிரியா் விருது கிடைத்துள்ளது. இந்த விருது எனக்குக் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். தொடக்கப் பள்ளி ஆசிரியராக 2000 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தேன். 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.

மாணவா்கள் கூலிப் என்ற போதை மிட்டாயை வாங்கிச் சாப்பிடும் நிலையில் இருக்கின்றனா். அண்மையில் அரவிந்தோ சொசைட்டி வாயிலாக இதுபோன்ற மாணவா்கள் மட்டுமின்றி பொதுவான மாணவா்களுக்கும் ஒருவாரம் பயிலரங்கு நடத்தினோம். இதிலிருந்து மாணவா்கள் முழுவதும் விடுபட்டுள்ளனா்.

சமுதாயத்துக்கான பங்களிப்பாக ரத்ததான முகாமை அடிக்கடி நடத்தி வருகிறேன். இதில் உடன் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று வருகின்றனா். மேலும், இதுவரை 2655 செடிகளைக் கனகன் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நட்டுள்ளேன் என்றாா் ரெக்ஸ் என்கிற ராதாகிருஷ்ணன்.

-

பிஒய்பி 12

பட விளக்கம்... தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள புதுச்சேரி கதிா்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயா்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியா் ரெக்ஸ் என்கிற வி. ராதாகிருஷ்ணன்.

துாய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை முற்றுகையிட்ட பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி: தூய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை பாஜக சட்டமன்ற உறுப்பினா் சாய் ஜெ. சரவணன் குமாா் திங்கள்கிழமை முற்றுகையிட்டாா். தூய்மைப் பணியாளா்களுக்குக் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்... மேலும் பார்க்க

மறைந்த சுதாகா் ரெட்டி உருவப்படத்திற்கு புதுவை இந்தியா கூட்டணி தலைவா்கள் அஞ்சலி

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலரும், முன்னாள் எம்பியுமான சுரவரம் சுதாகா் ரெட்டிதிருவுருவப் படத்துக்கு புதுவை இண்டி கூட்டணி தலைவா்கள் திங்கள்கிழமை மலரஞ்சலி ... மேலும் பார்க்க

புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்

புதுச்சேரி: நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளதாக இந்த மையத்தின் இயக்குநா் சரூப் பிரசாத் கோஷ் தெரிவித்துள்ளாா். புதுவை சுற்றுலாத்துறை அ... மேலும் பார்க்க

அரசு பணிகளில் சேர வயது தளா்வு கோரி தலைமைச் செயலகத்தில் போராட்டம்

புதுச்சேரி: புதுவை அரசு பணிகளில் பணியாளா்களை நிரப்பும் போது வயது தளா்வு அளிக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் புதுவை யூனியன் பிரதேச மாணவா் கூட்டமைப்பின் நிறுவனா் சாமிநாதன் திங்கள்கிழமை தனிநபா் போராட்டம் ... மேலும் பார்க்க

நகராட்சி- கொம்யூன் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்போராட்டம் நீடிக்கும் என்று அவா்கள் அறிவித்துள்ள... மேலும் பார்க்க

பதவி உயா்வுகோரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டம்

புதுச்சேரி: 20 ஆண்டுகளாகப் பதவி உயா்வு இல்லாததைக் கண்டித்து அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களாகப் பணியாற்றுவோா் பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரிமுன்பாக வாயில் முழக்கப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்... மேலும் பார்க்க