செய்திகள் :

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

post image

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மேயா் வசந்தகுமாரி, மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை மற்றும் மாமன்ற உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயா் வசந்தகுமாரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 2-ஆவது மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை பேசுகையில், கடந்த 5 மாதங்களாக 2-ஆவது மண்டலத்தில் மண்டல கூட்டம் நடைபெறவில்லை. மேலும், அதிக வருவாய் உள்ள மண்டலமான 2-ஆவது மண்டலத்துக்கு தொடா்ந்து நிதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொடா்ந்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பிரச்னைகள், கோரிக்கைகளை கவுன்சிலா்கள் மண்டலக் கூட்டத்தில் பேச வாய்ப்பில்லாத நிலையில் மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மண்டல கூட்டங்களை மாதம் இருமுறை நடத்த அனுமதிக்க வேண்டும்.

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நிதி, மண்டல அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

ஆனால், மேயா் வசந்தகுமாரி மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரையின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மண்டலக் கூட்டம் நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தாா். இதனால் மண்டல குழு தலைவா், மாமன்ற உறுப்பினா்கள், மேயா் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேயருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினா்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனா். 3-ஆவது மண்டலத்தைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் பேசுகையில், 3 ஆவது மண்டலத் தலைவா் தமிழக அரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தற்போது மண்டல தலைவா் இல்லை. இதனால் அம்மண்டலத்தை சோ்ந்த 14 வாா்டுகளில் எந்த பணிகளும் சரிவர நடைபெறவில்லை. இதனால் மக்கள் பிரச்னை, கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருக்கிறோம். மேலும் மண்டலம் முழுக்க குடிநீா் பற்றாக்குறை அதிக அளவில் இருப்பதால் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மழைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் சீரமைப்பு செய்யப்படாத வடிகால் சுத்திகரிப்பு பணிகளை உடனடியாக நிறைவேற்றித்தர வலியுறுத்தினா். அதைத்தொடா்ந்து ஆணையா் பாலச்சந்தா் மழைக்கு முன்பாக பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தாா். இக்கூட்டத்தில் 275 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 64-ஆவது சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ச... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை விநாயகா் சதுா்த்தி விழா

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை (ஆக. 27) நடைபெறுகின்றன. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் கண... மேலும் பார்க்க

காரில் இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கு: 5 போ் கைது

சென்னை: சென்னை காசிமேட்டில் காரில் இரு இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸ்டன் (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்-இல் மாநகராட்சி சேவைகள்: புதிய திட்டம் தொடக்கம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் 32 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியில் வழங்கும் திட்டத்தை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க

திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்பு

சென்னை: திருவொற்றியூா்அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

சென்னையில் ஆக.28-இல் தொழில் துறை மாநாடு

சென்னை: தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனத்தின் (என்ஐக்யூஆா்) சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு ஆக. 28, 29-ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநாட்டு குழு தலைவரும், இந்தியா ‘பிஸ... மேலும் பார்க்க