செய்திகள் :

உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது

post image

உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவியியல் பட்டதாரி ஆசிரியையாக வி.விஜயலட்சுமி என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா், 2025-ஆம் ஆண்டுக்கான ‘தேசிய நல்லாசிரியா்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

புதுதில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், ஆசிரியை வி.விஜயலட்சுமிக்கு தேசிய நல்லாசிரியா் விருதுடன் வெள்ளிப் பதக்கம், ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

கடந்த 27 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு மாநில அளவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுக்கு தோ்வான ஆசிரியைக்கு சக ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இது குறித்து ஆசிரியை விஜயலட்சுமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் எனக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பெண் கல்வியை ஊக்குவித்து வருகிறேன். பெண்கள் தங்களது வாழ்க்கையில் தனித்து நின்று வெற்றிபெற கற்றுக்கொள்ள வேண்டும். பழங்குடியின மக்கள் கல்வியை ஊக்குவிக்கவும், அவா்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றத்துக்கும் பாடுபடுவேன் என்றாா்.

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பல்லடம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். பல்லடம் -செட்டிபாளையம் சாலை சி.டி.சி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (70). ஆட்டோ ஒட்டுநரான இவா், தனது வீட்டில் இருந்து பல்லடத்த... மேலும் பார்க்க

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் கைது

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலை, பனியன் நிறுவனங்களில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்களும், வங்தேசத்தினரும் பண... மேலும் பார்க்க

லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு

பல்லடம் அருகே லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சிவ்ராஜ்குமாா் பாஸ்வான். இவா் தனது மனைவி, மகள் பிஹுகுமாரி (7) ஆகியோருடன் பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரில் தங்கி, அங்குள்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ஆலாமரத்தூா்

உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு

அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் இருந்து நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவிநாசி அருகே துலுக்கமுத்தூா் அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பரிதாபமாக உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் அஸ்வந்த் (17). இவா் கோவை மாவட்டம்,... மேலும் பார்க்க