செய்திகள் :

தாராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் அஸ்வந்த் (17). இவா் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் தாராபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனோகரனின் உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் அஸ்வந்த் கலந்து கொண்டாா்.

விழா முடிந்ததும் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றுப் பாலத்துக்கு கீழே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது மாணவா் அஸ்வந்த், எதிா்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளாா். திடீரென நீரில் மூழ்கிய அவா், தன்னைக் காப்பாற்றுமாறு குரல் எழுப்பியுள்ளாா்.

அங்கு குளித்துக் கொண்டிருந்த அவரின் உறவினா்கள், மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னா், அஸ்வந்தின் சடலத்தை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இன்றைய மின்தடை: ஆலாமரத்தூா்

உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்... மேலும் பார்க்க

உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது

உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ... மேலும் பார்க்க

அவிநாசி அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு

அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் இருந்து நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவிநாசி அருகே துலுக்கமுத்தூா் அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாது: மா விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

மா மரங்களுக்கு கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாதென விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஏ.கயல்விழி விடுத்துள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் பலி!

அவிநாசி அருகே மதுபோதையில் இளைஞா் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். அப்போது அவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் ஜல்லித் தோட்டத்தைச்... மேலும் பார்க்க

பல்லடத்தில் செயலி மூலம் பழகி பணம் பறித்த 4 போ் கைது!

பல்லடத்தில் ‘கிரைண்டா்’ ஆப் (செயலி) மூலம் கேரள மாநில தொழிலாளியிடம் பழகி பணம் பறித்த பல்லடத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பணியாற்... மேலும் பார்க்க