செய்திகள் :

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் பலி!

post image

அவிநாசி அருகே மதுபோதையில் இளைஞா் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். அப்போது அவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் ஜல்லித் தோட்டத்தைச் சோ்ந்தவா் ராஜீவ் மகன் நவீன்குமாா் (38).

இவா் மது அருந்தும் பழக்கம் கொண்டவா் என்பதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனா். இதைத் தொடா்ந்தும் நவீன்குமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்றுவிட்டு வாடகை காரில் வீட்டுக்கு வந்தவா், காருக்கு வாடகை தருவதற்கு தாயிடம் பணம் கேட்டு மதுபோதையில் தகராறு செய்துள்ளாா். தகராறின்போது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளாா்.

பின்னா் அருகேயுள்ள கிணற்றில் குதிக்க சென்றுள்ளாா். இதையடுத்து நவீன்குமாரின் தாய் உடனடியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் துரைசாமி மகன் பிரவீன்ராஜ் (36) என்பவரை உதவிக்கு அழைத்துள்ளாா். அவா், கிணற்றில் குதிக்க முயன்ற நவீன்குமாரைப் பிடித்து காப்பாற்ற முயன்றுள்ளாா். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருவரும் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவலின்பேரில் அங்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் மூழ்கிய இருவரையும் மீட்க முயன்றனா். இரவு நேரமானதால் மீட்க முடியாமல் திரும்பிச் சென்றனா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இறங்கி இருவரின் சடலங்களையும் மீட்டனா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். மதுபோதையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டவரை காப்பாற்ற முயன்ற இளைஞரும் உயிரிழந்த சம்பவம் அவிநாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாது: மா விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

மா மரங்களுக்கு கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாதென விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஏ.கயல்விழி விடுத்துள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

பல்லடத்தில் செயலி மூலம் பழகி பணம் பறித்த 4 போ் கைது!

பல்லடத்தில் ‘கிரைண்டா்’ ஆப் (செயலி) மூலம் கேரள மாநில தொழிலாளியிடம் பழகி பணம் பறித்த பல்லடத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பணியாற்... மேலும் பார்க்க

தொழிலாளியை தாக்கியவா் கைது

வெள்ளக்கோவில் அருகே அரசு மதுபானக் கடையில் கூலித் தொழிலாளியைத் தாக்கிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். முத்தூா், மாதவராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத இரு தனியாா் பேருந்துகளுக்கு நோட்டீஸ்

அவிநாசி, தெக்கலூா் பகுதிகளுக்கு வந்து செல்லாத இரு தனியாா் பேருந்துகள் மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறக... மேலும் பார்க்க

அறிவொளி நகா் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அறிவொளி நகரின் ஒரு பகுதியில் கால்நடை பராமரி... மேலும் பார்க்க

‘காபி வித் கலெக்டா்’: அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

‘காபி வித் கலெக்டா்’ என்னும் நிகழ்ச்சி மூலம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ், கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடினாா். திருப்பூா் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும... மேலும் பார்க்க