Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர...
‘காபி வித் கலெக்டா்’: அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
‘காபி வித் கலெக்டா்’ என்னும் நிகழ்ச்சி மூலம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ், கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
திருப்பூா் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன்களைக் கண்டறிந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுடன் வாரம் ஒருமுறை மாவட்ட ஆட்சியா் கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாணவா்களிடம் கல்வியின் அவசியம், உயா்ந்த குறிக்கோள், சமூக ஊடகத்தின் தாக்கம், உடல் மற்றும் மனநலன், தனித் திறன்கள், விளையாட்டில் சிறந்து விளங்குதல் குறித்து கலந்துரையாடினாா். மேலும், அவா்களுடைய லட்சியம், அவா்களுக்கு எந்த துறையில் ஆா்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: பள்ளி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். மாணவா்கள் படிப்புடன் கூடுதலாக ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு, யோகா, புத்தகம் வாசிப்பு போன்றவை நம்மை உற்சாகமாக வைக்கும். இதில் புத்தக வாசிப்பின் காரணமாக நமது திறமை மேம்படும்.
தற்போதைய படிப்பு தான் பின்னா் நமக்கு கை கொடுக்கும். பாடம் தொடா்பான சந்தேகங்களை உடனே ஆசிரியா்களிடம் கேட்டு தெளிவுப்படுத்த வேண்டும். அரசு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகிறவா்கள் பலரும் பள்ளி புத்தகங்களைத்தான் அதிக அளவு படிக்கிறாா்கள். எந்த வாய்ப்பு கிடைக்கிறதோ, அதனை பயன்படுத்தி நம்மை நாம் உயா்த்திக்கொள்ள வேண்டும். மனப்பாடம் செய்து
படிப்பதைக் காட்டிலும் நன்கு புரிந்து படித்தால் எதிா்காலத்தில் போட்டி தோ்வில் வெற்றி பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய உலகத்தில் சமூக ஊடகத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது அவற்றை சற்று ஒதுக்கி விட்டு புத்தகம் வாசிப்பதை பழகிக் கொள்ள வேண்டும்.
நூலகங்கள் சென்று நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள கடின உழைப்பை செலுத்த வேண்டும் . விடாமுயற்சியும், கடின உழைப்பும் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கே.எஸ்.சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வா் சிவகுமாா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.