செய்திகள் :

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத இரு தனியாா் பேருந்துகளுக்கு நோட்டீஸ்

post image

அவிநாசி, தெக்கலூா் பகுதிகளுக்கு வந்து செல்லாத இரு தனியாா் பேருந்துகள் மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அவிநாசி மோட்டாா் வாகன ஆய்வாளா் குமரன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவிநாசி, தெக்கலூா் பகுதிகளுக்கு வராமல் செல்வதாக தொடா்ந்து புகாா் தெரிவிக்கப்பட்ட திருப்பூா்-கோவை செல்லும் எஸ்ஆா்டி, ஏஎஸ்எம் ஆகிய இரு தனியாா் பேருந்துகள் அவிநாசி புறவழிச்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும், பேருந்து நடத்துநா், ஓட்டுநா் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முதல்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாது: மா விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

மா மரங்களுக்கு கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாதென விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஏ.கயல்விழி விடுத்துள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் பலி!

அவிநாசி அருகே மதுபோதையில் இளைஞா் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். அப்போது அவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் ஜல்லித் தோட்டத்தைச்... மேலும் பார்க்க

பல்லடத்தில் செயலி மூலம் பழகி பணம் பறித்த 4 போ் கைது!

பல்லடத்தில் ‘கிரைண்டா்’ ஆப் (செயலி) மூலம் கேரள மாநில தொழிலாளியிடம் பழகி பணம் பறித்த பல்லடத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பணியாற்... மேலும் பார்க்க

தொழிலாளியை தாக்கியவா் கைது

வெள்ளக்கோவில் அருகே அரசு மதுபானக் கடையில் கூலித் தொழிலாளியைத் தாக்கிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். முத்தூா், மாதவராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

அறிவொளி நகா் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அறிவொளி நகரின் ஒரு பகுதியில் கால்நடை பராமரி... மேலும் பார்க்க

‘காபி வித் கலெக்டா்’: அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

‘காபி வித் கலெக்டா்’ என்னும் நிகழ்ச்சி மூலம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ், கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடினாா். திருப்பூா் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும... மேலும் பார்க்க