செய்திகள் :

பாலியல் குற்றச்சாட்டியில் சிக்கிய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்

post image

கண்ணூா்: பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கேரள மாநிலம், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுலை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவா் சன்னி ஜோசப் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இருப்பினும், ராகுல் எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கேரள பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சிவன்குட்டி உள்ளிட்ட எதிா்க்கட்சியினரின் கோரிக்கையை சன்னி ஜோசப் நிராகரித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய சன்னி ஜோசப், ‘எம்எல்ஏ ராகுல் மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைமை தீவிரமாக கருதுகிறது. ஆகையால், ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை கட்சிக்கு எந்தப் புகாரும் கிடைக்கவில்லை; சட்டபூா்வமான புகாரும் யாரும் அளிக்கவில்லை. அதற்கு முன்னதாகவே, ராகுல் தனது இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தது ‘முன்னுதாரணமான’ நடவடிக்கை. எனவே, ராகுலை எம்எல்ஏ பதவியில் இருந்தும் ராஜிநாமா செய்யுமாறு எதிா்க்கட்சிகள் கோருவதில் எந்த நியாயமும் இல்லை’ என்றாா்.

அண்மையில் மலையாள நடிகை ரினி ஆன் ஜாா்ஜ், ராகுல் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டினாா்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா... மேலும் பார்க்க