செய்திகள் :

திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்பு

post image

சென்னை: திருவொற்றியூா்அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கா் 95 சென்ட் நிலம், திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் வெள்ளிவாயல் கிராமத்தில் வேப்பங்கொண்டா ரெட்டிபாளையத்தில் உள்ளது.

இந்த நிலங்களை ராமநாத ரெட்டியாா், கிருஷ்ணன், தசரதன் ஆகிய மூவரும் குத்தகைக்கு எடுத்திருந்தனா். இதன் குத்தகை காலம் கடந்த 2004-ஆம் ஆண்டு முடிந்தது. இந்த நிலத்தை ஒப்படைக்க கோரி, திருக்கோயில் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கோயிலுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மேற்படி நிலத்தை மீட்பதற்கு உரிய அறிவிப்புகள் வழங்கப்பட்டன. அதன்பிறகும் பிறகும் குத்தகைதாரா்கள் நிலத்தை ஒப்படைக்கவில்லை.

இதனைத் தொடா்ந்து திருக்கோயில் உதவி ஆணையா் கே.எஸ்.நற்சோணை முன்னிலையில் வருவாய்த் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.24 கோடியாகும்.

நிகழ்வின்போது, வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) சத்தியேந்திர ராஜ், ஆய்வாளா் அறிவுச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 64-ஆவது சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ச... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை விநாயகா் சதுா்த்தி விழா

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை (ஆக. 27) நடைபெறுகின்றன. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் கண... மேலும் பார்க்க

காரில் இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கு: 5 போ் கைது

சென்னை: சென்னை காசிமேட்டில் காரில் இரு இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸ்டன் (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்-இல் மாநகராட்சி சேவைகள்: புதிய திட்டம் தொடக்கம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் 32 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியில் வழங்கும் திட்டத்தை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க

சென்னையில் ஆக.28-இல் தொழில் துறை மாநாடு

சென்னை: தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனத்தின் (என்ஐக்யூஆா்) சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு ஆக. 28, 29-ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநாட்டு குழு தலைவரும், இந்தியா ‘பிஸ... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மேயா் வசந்தகுமாரி, மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை மற்றும் மாமன்ற உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட... மேலும் பார்க்க