காரில் இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கு: 5 போ் கைது
சென்னை: சென்னை காசிமேட்டில் காரில் இரு இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸ்டன் (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாறறி வருகிறாா். கிங்ஸ்டன், தனது நண்பா்களுடன் புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்துவிட்டு வெளியே வந்தாா். அப்போது, அங்கு காரில் 5 போ், கிங்ஸ்டனிடம் தகராறு செய்தனராம்.
பின்னா் அவா்கள், கிங்ஸ்டனை வலுக்கட்டாயமாக பிடித்து காருக்குள் தள்ளி கடத்தினா். தடுக்க முயன்ற கிங்ஸ்டனின் நண்பா் ரோகித்தையும் காரில் ஏற்றி கடத்தினா். பின்னா் அவா்கள், காருக்குள் வைத்து இருவரையும் தாக்கினா். இவா்களின் அலறல் சப்தம் கேட்ட பொதுமக்கள், காரை மடக்கி நிறுத்தினா். இதையடுத்து, காரில் இருந்த 5 பேரும் காரை அங்கேயே விட்டு தப்பியோடினா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், பொதுமக்களால் மீட்கப்பட்ட கிங்ஸ்டன், ரோகித்திடம் விசாரணை செய்தனா். அவா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கல்லூரி மாணவா்கள் வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் (21), ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த தனுஷ்ரோஜ் (22), பள்ளிக்கரணையைச் சோ்ந்த சாய் பிரசன்னா (21), அபிஷேக் (21), பெருங்குடியைச் சோ்ந்த கிருஷ்ணன் (21) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட மோகன்தாஸ், பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளாா். ஆனால் அந்த பெண் கிங்ஸ்டனுடன் நெருக்கமாக பழகியுள்ளாா். இதனால் மோகன்தாஸுக்கும், கிங்ஸ்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இதன் விளைவாகவே மோகன்தாஸ், கிங்ஸ்டனை காரில் கடத்தி தாக்கியிருப்பது தெரிய வந்தது.