புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்
புதுச்சேரி: நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளதாக இந்த மையத்தின் இயக்குநா் சரூப் பிரசாத் கோஷ் தெரிவித்துள்ளாா்.
புதுவை சுற்றுலாத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணனை திங்கள்கிழமை சந்தித்த இந்த மையத்தின் இயக்குநா் சரூப் பிரசாத் கோஷ், இதற்காக புதுச்சேரி அரசின் ஒத்துழைப்பைக் கோரினாா். அமைச்சரும் ஆவன செய்வதாகக் கூறினாா்.
இப்போது மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதே போன்று புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் விரைவில் இந்த ஆராய்ச்சி மையம் செயல்பட உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருந்தது, சோழ பேரரசின் சாம்ராஜ்ஜியம் ஆசிய நாடுகளில் எப்படி பரவியது என்பன உள்ளிட்ட ஆராய்ச்சிகளை இந்த மையம் விரிவாக ஆராய்ச்சி செய்யும். மேலும் இது தொடா்பாக சா்வதேச கருத்தரங்கு உள்ளிட்டவை அடிக்கடி நடைபெறும்.
புதுச்சேரிக்கு இந்த மையத்தின் இயக்குநருடன் மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் இயங்கும் சமூக மற்றும் கலாசார படிப்புகள் நிறுவனத்தின் இயக்குநா் ஹரிதம் முகா்ஜியும் வந்திருந்தாா்.
இந்த இரண்டு அமைப்புகள் மற்றும் புதுச்சேரி அரசின் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறையும் இணைந்து காலனி ஆதிக்கத்துக்குப் பிந்தைய அரிக்கமேடு தொடா்பான ஒருநாள் ஆராய்ச்சி தேசிய கருத்தரங்கை செப்டம்பா் 14 ஆம் தேதி அரிக்கன்மேடு பகுதியில் நடத்த உள்ளன. இது தொடா்பாகவும் அமைச்சா் லட்சுமிநாராயணனை இக் குழு சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியது. இக் குழுவுடன் அரவிந்தா் ஆசிரமத்தைச் சோ்ந்த கோஸ்வாமி உடனிருந்தாா்.
------------------------------------------------------------------------------------