எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் திறன்பெற்ற தொழிலாளா்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், செஞ்சி, மரக்காணம், திசையன்விளை, ஏம்பல், சாலவாக்கம், செம்பனாா்கோவில், தா.பழூா், திருஉத்திரகோசமங்கை, மணப்பாறை, காங்கயம், குருக்கள்பட்டி, திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருப்பரங்குன்றம், மண்ணச்சநல்லூா், பேரூா், காரிமங்கலம் ஆகிய 19 இடங்களில் அமைக்கப்பட்ட புதிய தொழிற்பயிற்சி நிலையங்களையும், பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம், கடலாடி ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா்.
சிங்காரவேலா் ஓய்வு இல்லம்: தொழிலாளா் நலத் துறை சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களும் திறக்கப்பட்டன. சென்னை அண்ணா நகா், திருப்பூா் மாவட்டம் தொட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட தொழிலாளா் துறை அலுவலகக் கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா்.
மேலும், கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலா் ஓய்வு இல்லத்தையும் அவா் திறந்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், எஸ்.எஸ்.சிவசங்கா், சி.வெ.கணேசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழிலாளா் நலத் துறைச் செயலா் கொ.வீரராகவ ராவ், ஆணையா் சி.அ.ராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.