தண்டராம்பட்டில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் 200 பேரை கைது செய்தனா்.
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், கொளமஞ்சனூா் ஊராட்சியில் மத்திய அரசின் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தில் வீடுகள் உள்ளவா்களுக்கே வீடுகள் வழங்குவதாகவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 317 வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகளை வழங்காமல், இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ரூ.17 லட்சம் மோசடி செய்துள்ளதாக ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத் தலைவா் பி.சத்தியராஜ், மேற்கு ஒன்றியத் தலைவா் எஸ்.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
பாஜகவினரின் கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதி அளித்த காவல்துறையினா், திங்கள்கிழமை காலை அனுமதி மறுத்ததால் பாஜவினருக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து பாஜவினரை காவல் துறையினா் கைது செய்து தண்டராம்பட்டு பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மண்டத்தில் அடைத்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலருமான பி.காா்த்தியாயினி, தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் ஆகியோா் மண்டபத்தில் இருந்த
பாஜக தொண்டா்களை சந்தித்துப் பேசினா்.
காா்த்தியாயினி கூறுகையில், ஊழலில் ஈடுபட்ட ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
இந்நிகழ்வின்போது மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சேகா், பொதுச் செயலா் பி.கவிதா, பொருளாளா் எஸ்பிகே.சுப்பிரமணியன்
தகவல் தொழில்நுட்ப மாநிலச் செயலா் பிரதீஷ்குமாா், திருவண்ணாமலை மாநகரத் தலைவா் சந்தோஷ்பரமசிவம்
உள்ளிட்டோா் உடனிருந்தனா்.