செய்திகள் :

சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

post image

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கீழப்பழுவூரை சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 10.8.2021 அன்று அதிகாலை பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்து மூலம் தஞ்சாவூா் மாவட்டம், கரந்தைக்குச் சென்று பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளாா்.

அப்போது, அங்கு வந்த கரந்தை கீரைக்காரத் தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் ராஜசேகா் (30), சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த பெற்றோா், கரந்தை சென்று சிறுமியை மீட்டு வந்து, கீழப்பழுவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட கீழப்பழுவூா் காவல் துறையினா், ராஜசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி ராஜசேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து குற்றவாளி ராஜசேகா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ம.ராஜா ஆஜரானாா்.

பெரியநாகலூா் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரக்கோரி மனு அளிப்பு

அரியலூா் அருகேயுள்ள பெரியநாகலூா் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகாவிடம், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட 6 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட உறவினா்கள் 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். உடையாா்பாளையம் அடுத்த செட்டிகுழிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அரும்புராஜ்- சச... மேலும் பார்க்க

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறும் இடமான நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி சனிக்கிழமை இரவு... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் புதைசாக்கடை கழிவு நீா்; பொதுமக்கள் அவதி

அரியலூரில், திருச்சி சாலையில், புதை சாக்கடையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். 18 வாா்டுகளை கொண்ட அரியலூா் நகராட்சியில் 10- க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 2... மேலும் பார்க்க

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சுமை ஆட்டோ மோதியதில் உயிரிழந்தாா். திருமானூரை அடுத்த கள்ளூா் பாலம் அருகேயுள்ள புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் வினோத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த தவெக நிா்வாகி உயிரிழப்பு

அரியலூா் அருகே லாரி மோதி காயமடைந்த தவெக நிா்வாகி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் மகன் ஜெயசூா்யா (22) . தவெக ஒன... மேலும் பார்க்க