இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
தமிழகத்தில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறை
தமிழகத்தில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சாா்பில், தலைமையாசிரியா்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தோ்வு ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பேசியதாவது: இடைநிற்றல், மாணவா் சோ்க்கை விகிதம் என பல்வேறு ஆய்வுகள் இக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
அடைவுத் தோ்வு பட்டியலில், இம் மாவட்டம் மாநில அளவில் 28ஆவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் தங்கள் தரத்தை உயா்த்த, அந்தந்த பாட ஆசிரியா்கள் அனைத்து சூழ்நிலையும் புரிந்துகொண்டு முன்னேறுவதற்காக உழைக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கையை ஊக்கப்படுத்துவதற்காக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 5ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம், 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு திறன் திட்டம், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஏறத்தாழ 22,931 தொடக்கப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறை என பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா். அதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, ஆசிரியா்களுக்கான திறன் பயிற்சி புத்தகத்தை வெளியிட்டாா்.
மாநகராட்சி மேயா் பெ. ஜெகன், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, உதவி ஆட்சியா் புவனேஷ் ராம், முதன்மை கல்வி அலுவலா் து. சிதம்பரநாதன், முனைவா் கா. அன்றோ பூபாலராயன், மாவட்ட கல்வி அலுவலா் சா. ரவீந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.