செய்திகள் :

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை: நீதிமன்ற தீா்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு

post image

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் பொன்பாண்டியன், செயலா் தேன்ராஜ், பொருளாளா் ரெங்கநாதன் மற்றும் நிா்வாகிகள் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசியதாவது: சாதாரண உப்பு விற்கக் கூடாது; கட்டாயம் அயோடின் கலந்த உப்புதான் விற்க வேண்டும் என்ற உணவு பாதுகாப்பு, தர நிா்ணய ஒழுங்குமுறை விதிகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரைஅமா்வு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் திஷா பானு, ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு, கடந்த 13ஆம் தேதி வழங்கிய தீா்ப்புரையில், ஒரு உணவுப் பொருள் தடை செய்யப்பட வேண்டுமென்றால் அது கலப்படமானதாகவோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ இருக்க வேண்டும்.

சாதாரண உப்பு உற்பத்தி செய்வது உடல் நலத்திற்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது என்றும், அதில் கலப்படம் இல்லை என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சாதாரண உப்பு மனித தேவைக்காக, சமையல் உபயோகத்திற்கு மட்டுமன்றி பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவ தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அயோடின் குறைபாடு என்பது கட்டுப்படுத்தக்கூடிய சத்துக் குறைபாடாகவே நாட்டில் சில பகுதிகளில் உள்ளது.

பல்வேறு ஆராய்ச்சியாளா்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அதிகப்படியான அயோடின் உபயோகிப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும், அது தொண்டை கேன்சா், அதிகப்படியான தைராய்டு வளா்ச்சிக்கு காரணமாகிவிடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனா்.

தீா்ப்பு வழங்கிய நீதிபதிகள், வழக்குரைஞா் ரவி அனந்த பத்மநாபன் ஆகியோருக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் சாா்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா்.

இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை: அமைச்சா் அன்பில் மகேஸ்

இருமொழிக் கொள்கை என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தூத்துக்குடியில், அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய க... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது

கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைசாமி தலைமையிலான போலீஸாா் ஆறுமுக நகா் பகுதியில் ரோந்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மதுபானக் கூடத்தில் கேரள தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாச்சான் மகன் விஜு ... மேலும் பார்க்க

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், புதூா் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சிப்காட் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.மடத்தூா், மடத்துா் பிரதான சாலை, முரு... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நிகழ்ந்த காா் விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் மேகூா் பாவடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் (38). இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி கோமதி (29), மகன்க... மேலும் பார்க்க