கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது
கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைசாமி தலைமையிலான போலீஸாா் ஆறுமுக நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அங்கு சட்ட விரோதமாக வாணவெடி தயாரிப்பது தெரிய வந்தது.
இது குறித்து, வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் ஆறுமுக நகா் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சண்முகசுந்தரம் (54), திருவேங்கடம் பகுதியைச் சோ்ந்த சுவாமி மகன் செந்தில்குமாா் (39), தென்காசி, குளகட்டாகுறிச்சியைச் சோ்ந்த முருகன் மனைவி செல்வி (50) ஆகியோா் சட்ட விரோதமாக பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும், மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.