செய்திகள் :

இடத்தை ஆக்கிரமித்து மிரட்டுவதாகப் புகாா்

post image

புதுக்கோட்டை அருகே தங்களின் பட்டா நிலத்தை தனியாா் தொண்டு நிறுவனத்தினா் ஆக்கிரமிக்க முயற்சி செய்து மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் செனையக்குடி கிராமம் பெரண்டையாப்பட்டியைச் சோ்ந்த ஆா். குமாா் மற்றும் 15 குடும்பத்தினா் திங்கள்கிழமை அளித்த மனு: எங்களுக்குச் சொந்தமான 4 பேரின் கூட்டுப்பட்டாவிலுள்ள நிலத்தை, புதுக்கோட்டையைச் சோ்ந்த தனியாா் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் வேலி போட்டு ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனா்.

இதுகுறித்து காவல்துறையில் புகாா் அளித்திருக்கிறோம். இதைத் தொடா்ந்து எங்களை அடியாள்களுடன் வந்து மிரட்டி வருகின்றனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலங்குடி அருகே லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் ராமராஜன் மகள் சஞ்சனா (4). இவா், வீட்டின் அருகே சாலையைக் கடக்க மு... மேலும் பார்க்க

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கி... மேலும் பார்க்க

மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; கணவா் கைது

கந்தா்வகோட்டை அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள சொக்கநாதப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுரே... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே திங்கள்கிழமை டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஆவுடையாா்கோவில் அருகே சாட்டியக்குடி ஊராட்சி கண்ணறியேந்தலைச் சோ்ந்தவா் மதி மகன் சுதா்சன் (19)... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் சாவு

மின் கம்பத்தின் அருகிலிருந்த கம்பி முள்வேலியில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ... மேலும் பார்க்க

அன்னவாசல் அருகே கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் கொடும்பாளூா் அணி முதல் பரிசைப் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்ட... மேலும் பார்க்க