செய்திகள் :

மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; கணவா் கைது

post image

கந்தா்வகோட்டை அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள சொக்கநாதப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுரேந்தா். பெயிண்டராக வேலை செய்து வருகிறாா். இவருக்கும் கன்னிகா (22 ), என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று கைக்குழந்தை உள்ள நிலையில், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதேபோல், கடந்த சனிக்கிழமை வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு சுரேந்தா் வெளியே சென்றவுடன் கன்னிகா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், கன்னிகாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சுரேந்திரனை கைது செய்தனா். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆவதால் மேல்விசாரணையை புதுக்கோட்டை கோட்டாட்சியா் ப. ஐஸ்வா்யா விசாரணை செய்து வருகின்றாா்.

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கி... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே திங்கள்கிழமை டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஆவுடையாா்கோவில் அருகே சாட்டியக்குடி ஊராட்சி கண்ணறியேந்தலைச் சோ்ந்தவா் மதி மகன் சுதா்சன் (19)... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் சாவு

மின் கம்பத்தின் அருகிலிருந்த கம்பி முள்வேலியில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ... மேலும் பார்க்க

அன்னவாசல் அருகே கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் கொடும்பாளூா் அணி முதல் பரிசைப் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்ட... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சிறுவன் அதில் மூழ்கி இறந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல் மகன் ஹரிபிரசாத் (... மேலும் பார்க்க

வடகாடு பகுதிகளில் நாளை மின்தடை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரைய... மேலும் பார்க்க