செய்திகள் :

அன்னவாசல் அருகே கபடி போட்டி

post image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் கொடும்பாளூா் அணி முதல் பரிசைப் பெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்டவா் திடலில் சிவா நினைவு கபடிக் குழுவினரால் மாநில அளவிலான கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் முதல் பரிசு ரூ. 40 ஆயிரத்தை கொடும்பாளூா் அணியும், இரண்டாம் பரிசு ரூ. 30 ஆயிரத்தை வெள்ளைக்கவுண்டம்பட்டி அணியும், மூன்றாம் பரிசு ரூ. 20 ஆயிரத்தை அகரப்பட்டி அணியும், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரத்தை கரூா் முதலைப்பட்டி அணியும் பெற்றன.

இந்த அணிகளுக்கு தனித்தனியாக கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்று வெற்றி வாய்ப்பை இழந்த அணிக்கு ரொக்கப் பரிசு, பதக்கங்கள் என சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ராப்பூசல் கிராம இளைஞா்கள் செய்தனா்.

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் சாவு

மின் கம்பத்தின் அருகிலிருந்த கம்பி முள்வேலியில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சிறுவன் அதில் மூழ்கி இறந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல் மகன் ஹரிபிரசாத் (... மேலும் பார்க்க

வடகாடு பகுதிகளில் நாளை மின்தடை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரைய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி பலி!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டாா் சைக்கிளில் இருந்து விழுந்து விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். கறம்பக்குடி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சி.முருகேசன்(48) விவசாயி. ... மேலும் பார்க்க

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை நகரில் அதிக வேகத்துடனும் அதீத சப்தத்துடனும் இருசக்கர வாகனங்களை இயக்கும் இளைஞா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை... மேலும் பார்க்க

பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

தொடா்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா்... மேலும் பார்க்க