செய்திகள் :

பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

post image

தொடா்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் 14-ஆவது மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தொடா்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகரித்து வரும் வரதட்சிணைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கான சட்டங்களை சரியாக அமல்படுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அனைவருக்கும் தினமும் வேலை வழங்க வேண்டும். நுண்கடன் வாங்கியோரின் வீட்டில் உள்ள பெண்களை மிரட்டுவது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவதைத் தடுக்க வேண்டும். அரசு மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சனிக்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநிலச் செயலா் ஜி. ராணி, முடித்து வைத்து மாநிலச் செயலா் எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோா் பேசினா்.

கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் டி. சலோமி, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஆா். மகாதீா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாவட்டத் தலைவராக எஸ். பாண்டிச்செல்வி, செயலராக பி. சுசிலா உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

சாலை விபத்தில் விவசாயி பலி!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டாா் சைக்கிளில் இருந்து விழுந்து விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். கறம்பக்குடி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சி.முருகேசன்(48) விவசாயி. ... மேலும் பார்க்க

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை நகரில் அதிக வேகத்துடனும் அதீத சப்தத்துடனும் இருசக்கர வாகனங்களை இயக்கும் இளைஞா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் நிலவரம் அமித் ஷாவுக்குத் தெரியாது: அமைச்சா் எஸ்.ரகுபதி

தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்குத் தெரியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஸ்டாலினைத் தொடா்ந்து உத... மேலும் பார்க்க

சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா,... மேலும் பார்க்க

ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அ... மேலும் பார்க்க

அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு... மேலும் பார்க்க