செய்திகள் :

சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா, இசை நீரூற்று என பல்வேறு வகையில் செயல்பட்டு வந்த சித்தன்னவாசல் பூங்கா இயற்கை சீற்றத்தாலும் பராமரிப்பு குறைந்ததாலும் பழுதடைந்து பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு தலத்தை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சித்தன்னவாசல் தலத்தை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தின் சாா்பில் சித்தன்னவாசல் சுற்றுலா வளா்ச்சி பணிகளுக்காக 3.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா சித்தன்னவாசல் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் கனிமவளத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கிவைத்தனா்.

இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து அன்னவாசல் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் (சமுதாய கூடம்) கட்டுவதற்கான பணிகளையும் அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.

ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அ... மேலும் பார்க்க

அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு... மேலும் பார்க்க

திறக்கப்பட்ட நாளிலேயே தேமுதிக அலுவலகம் சூறை: இருதரப்பினா் இடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள்வெட்டு

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்டது தொடா்பாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது. 4 போ் அரிவாளால் வெட்டப்பட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்... மேலும் பார்க்க

131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடியில் நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 5 வழக்குகளில் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கணித ஆசிரியா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பள்ளியின் கணித ஆசிரியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் குன்ன... மேலும் பார்க்க