செய்திகள் :

திறக்கப்பட்ட நாளிலேயே தேமுதிக அலுவலகம் சூறை: இருதரப்பினா் இடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள்வெட்டு

post image

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்டது தொடா்பாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது. 4 போ் அரிவாளால் வெட்டப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை மாரியம்மன் கோயில் தெருவில் தேமுதிக தொகுதி அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அலுவலகத்தை தேமுதிக ஒன்றிய செயலாளா் சிவக்குமாா் தலைமையில், மாவட்ட செயலாளா் காா்த்திகேயன் திறந்துவைத்து கொடியேற்றினாா்.

தொடா்ந்து அவா், தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் இருந்தபோது, அங்கு வந்த ஒரு தரப்பினா் உருட்டுக் கட்டை, கம்பியுடன் புகுந்து அனைவரையும் அடித்து பதாகைகளை கிழித்து அலுவலகத்தை சூறையாடினா்.

இந்தத் தகவலறிந்து மற்றொரு தரப்பினா் அரிவாளுடன் வந்து அலுவலகத்தை சூறையாடியவா்களில் 4 பேரை தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினா்.

சம்பவங்கள் குறித்து அறிந்து, அங்கு வந்த கந்தா்வகோட்டை போலீஸாா், மோதலில் காயமடைந்தவா்களை கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து தஞ்சை, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் விசாரணையில், தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்ட இடம் தொடா்பாக நீண்ட காலமாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. பிரச்னைக்குரிய இடத்தில் தேமுதிக அலுவலகத்தை திறந்ததால் இருதரப்பினரும் மோதிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக, பகட்டுவான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தாமரைச்செல்வம் கொடுத்த புகாரின்பேரில், பாலகுரு, சிவக்குமாா், ராஜீவ் காந்தி, கருணாநிதி ஆகியோா் மீதும், சிவக்குமாா் கொடுத்த புகாரின் பேரில், சக்திவேல், தாமரைச் செல்வம், சரத்குமாா், முருகேசன் ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா,... மேலும் பார்க்க

ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அ... மேலும் பார்க்க

அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு... மேலும் பார்க்க

131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடியில் நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 5 வழக்குகளில் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கணித ஆசிரியா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பள்ளியின் கணித ஆசிரியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் குன்ன... மேலும் பார்க்க