மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 5 வழக்குகளில் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி பிச்சை தலைமை வகித்தாா்.
பாரத ஸ்டேட் வங்கியின் ஆலங்குடி கிளை உள்ளிட்ட கிளைகளில் தனிநபா் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழில்கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று, திரும்பச் செலுத்தாமல் நிலுவையில் உள்ள 195 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், 5 வழக்குகளில் ரூ. 14.18 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
இதில், வங்கி நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், பங்கேற்றனா். முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு பணியாளா் செந்தில்ராஜா செய்திருந்தாா்.