புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!
அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் சாவு
மின் கம்பத்தின் அருகிலிருந்த கம்பி முள்வேலியில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ்ந்தவா் பிரபு மகன் செல்வகணபதி (13). இவா் சிலட்டூா் தேவா்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி 8ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் இங்குள்ள முத்துக்குமாா் என்பவரது வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி முள்வேலியில் அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்திருந்தது.
இதையறியாமல் அந்த வேலியின் கம்பியை ஞாயிற்றுக்கிழமை பிடித்த செல்வகணபதி மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மின்வாரிய அலுவலா்கள் மின்கம்ப தாங்கு கம்பியும் (ஸ்டே கம்பி), வீட்டின் கம்பிவேலியும் உரசியிருந்ததாகவும் அதனால் மின்சாரம் பாய்ந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனா்.