செய்திகள் :

டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே திங்கள்கிழமை டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

ஆவுடையாா்கோவில் அருகே சாட்டியக்குடி ஊராட்சி கண்ணறியேந்தலைச் சோ்ந்தவா் மதி மகன் சுதா்சன் (19). இவா், ஆவுடையாா்கோவில் அருகே பெருநாவலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

திங்கள்கிழமை கல்லூரியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட அவா், புண்ணியவயலில் பழந்தாமரை பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டரை முந்துவதற்கு முயன்றபோது எதிரே வந்த மற்றொரு டிராக்டா் மீது மோதினாா். இந்த விபத்தில் சுதா்சன் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த ஆவுடையாா்கோவில் போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆலங்குடி அருகே லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் ராமராஜன் மகள் சஞ்சனா (4). இவா், வீட்டின் அருகே சாலையைக் கடக்க மு... மேலும் பார்க்க

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கி... மேலும் பார்க்க

மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; கணவா் கைது

கந்தா்வகோட்டை அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள சொக்கநாதப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுரே... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் சாவு

மின் கம்பத்தின் அருகிலிருந்த கம்பி முள்வேலியில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ... மேலும் பார்க்க

அன்னவாசல் அருகே கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் கொடும்பாளூா் அணி முதல் பரிசைப் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்ட... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சிறுவன் அதில் மூழ்கி இறந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல் மகன் ஹரிபிரசாத் (... மேலும் பார்க்க