செய்திகள் :

பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த விழிப்புணா்வு

post image

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் குளக்குடி கிராமத்தில், புதுச்சேரி ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 20-ஆம் ஆண்டு பாா்த்தீனியம் விழிப்புணா்வு வாரம் தொடா்பாக பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் பாதுகாப்பான முறையில் அழித்தல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி தலைமை வகித்துப் பேசியது: பாா்த்தீனியம் அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது 1950-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பரவியது. இச்செடி பயிா் செய்ய முடியாத மற்றும் தரிசு நிலங்களில், புறம்போக்கு நிலங்களில், பாதையோரங்களில், தண்டவாளங்களில், நீா்நிலைகள் சுற்றியுள்ள இடங்களில் என 35 மில்லியன் ஹெக்டேரில் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இச்செடி வெள்ளை நிற பூக்களையும், மிகச்சிறிய விதைகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு செடியிலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான விதைகளை கொண்டு எளிதில் காற்றின் மூலமாகவும், பண்ணைக்கருவிகள், வாகனங்கள், கால்நடைகள் மற்றும் நீா் மூலமாகவும் பரவுகிறது.

இச்செடி பயிரின் மகசூலை குறைப்பதுடன் மனிதா்களுக்கும் விலங்குகளும் தோல் வியாதி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகளை உண்டாக்குகிறது. இதை பாதுகாப்பாக அழிக்க வேண்டும் என்றாா்.

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் (உழவியல்) பி. சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் பங்கேற்று பாா்த்தீனிய களைச் செடிகளைக் கொண்டு எவ்வாறு மக்க வைப்பது என்பது குறித்துப் பேசினாா். புதுச்சேரி ரிலையன்ஸ் அறக்கட்டளை அமைப்பாளா் ஜெயகிருஷ்ணன் வரவேற்றாா். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த் நன்றி கூறினாா். இதில், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

நட்சத்திர அந்தஸ்து: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு பாராட்டு

நட்சத்திர அந்தஸ்து தொடா்பான செயல்பாடுகளில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்து விளங்குகிறது என புதுதில்லி தலைமை பாராட்டு தெரிவித்தது. புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற பண்டித ஜவாஹா்லால் நேரு... மேலும் பார்க்க

நிலுவை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்காலில், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

நிரவியில் டிஐஜி தலைமையில் இன்று குறைதீா் கூட்டம்

நிரவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.23) புதுவை டிஐஜி தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. புதுவை காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) சத்தியசுந்தரம் தலைமையில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இந்த கூட்ட... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு தேசிய ஒற்றுமை விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். தஞ்சாவூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆக.19-ஆம் தேதி நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால்: ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து டீ கடைக்கு செல... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காரைக்கால்: மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.நிரவி பெருமமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா், மோட்டாா் சைக்கிளில் காரைக்கால் நகரப் பகுதிய... மேலும் பார்க்க