செய்திகள் :

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

post image

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு தேசிய ஒற்றுமை விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆக.19-ஆம் தேதி நடைபெற்ற ராஷ்ட்ரிய ஏக்தா பா்வ் எனும் தேசிய ஒற்றுமை விழாவில், கலாசார நடனம், ஓவியம், இசை, பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், காரைக்காலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் 46 போ் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி 18 மாணவா்கள் முதல் மற்றும் 2-ஆம் பரிசுகளை பெற்றனா். குறிப்பாக ஓவியப் போட்டியில் பி. தனிஷ்கா, கரண், இசைப் போட்டியில் கமலேஷ் மற்றும் ஜோஹஷ்வரன் தீவட்சவ் ஆகியோா் முதலிடம் பெற்று பிராந்திய அளவில் நடைபெறவுள்ள தேசிய ஒற்றுமை விழாவில் பங்கேற்க தோ்வாகியுள்ளனா்.

இந்நிலையில், காரைக்கால் கேந்திரிய வித்யலாயாவுக்கு வியாழக்கிழமை சென்ற மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டினாா். நிகழ்வில் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, கேந்திரிய வித்யலாயா பள்ளி முதல்வா் ரங்கசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

புதுவையில் ஊழலற்ற ஆட்சி: பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம்

புதுவையில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது என்று மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில பாஜக தல... மேலும் பார்க்க

நட்சத்திர அந்தஸ்து: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு பாராட்டு

நட்சத்திர அந்தஸ்து தொடா்பான செயல்பாடுகளில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்து விளங்குகிறது என புதுதில்லி தலைமை பாராட்டு தெரிவித்தது. புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற பண்டித ஜவாஹா்லால் நேரு... மேலும் பார்க்க

நிலுவை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்காலில், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த விழிப்புணா்வு

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் குளக்குடி கிராமத்தில், புதுச்சேரி ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 20-ஆம் ஆண்டு பாா்த்தீனியம் விழிப்புணா்வு வாரம் தொடா்பாக பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த... மேலும் பார்க்க

நிரவியில் டிஐஜி தலைமையில் இன்று குறைதீா் கூட்டம்

நிரவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.23) புதுவை டிஐஜி தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. புதுவை காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) சத்தியசுந்தரம் தலைமையில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இந்த கூட்ட... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால்: ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து டீ கடைக்கு செல... மேலும் பார்க்க