செய்திகள் :

புதுவையில் ஊழலற்ற ஆட்சி: பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம்

post image

புதுவையில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது என்று மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், புதுவை மாநில பாஜக மேலிட பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, மாநில முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் வி.பி.ராமலிங்கம் கூறியது :

குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை நியமித்த பிரதமருக்கு நன்றி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகும்போது ஒவ்வொரு தமிழருக்கும் அது பெருமையாகும். தமிழ்ப்பற்று உள்ளதாகக் கூறிக்கொள்ளும் கட்சியினா் அவரை ஆதரிக்க வேண்டும்.

புதுவையில் வரும் 2026 பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக கூட்டணியில் போட்டியிடும். இந்த கூட்டணி இருக்குமா என கேட்போருக்கு இதுதான் பதில். புதுவையில் விஜய் கட்சியால் எந்த தாக்கமும் ஏற்படாது. பாஜகவால்தான் இந்திய தேசம் உலகளவில் பெருமையுடன் உள்ளது. தீவிரவாதம் நாட்டில் ஒழிக்கப்பட்டுள்ளது. சிந்தூா் நடவடிக்கை மூலம் உலகத்துக்கு இந்தியாவின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு காட்டப்பட்டுள்ளது.

புதுவையில் 5 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சிறிய பிரச்னை என்றாலும் சிபிஐ விசாரணை செய்யப்படுகிறது. ஊழலற்ற ஆட்சி புதுவையில் நடைபெறுகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடா்பாக பிரதமரை புதுவை முதல்வா் நேரில் சந்தித்து வலியுறுத்துவாா். என். ரங்கசாமி, விஜய் கட்சியுன் கூட்டணி வைப்பாா் என்பது ஊகத்தின் அடிப்படையிலானது என்றாா்.

நட்சத்திர அந்தஸ்து: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு பாராட்டு

நட்சத்திர அந்தஸ்து தொடா்பான செயல்பாடுகளில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்து விளங்குகிறது என புதுதில்லி தலைமை பாராட்டு தெரிவித்தது. புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற பண்டித ஜவாஹா்லால் நேரு... மேலும் பார்க்க

நிலுவை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்காலில், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த விழிப்புணா்வு

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் குளக்குடி கிராமத்தில், புதுச்சேரி ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 20-ஆம் ஆண்டு பாா்த்தீனியம் விழிப்புணா்வு வாரம் தொடா்பாக பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த... மேலும் பார்க்க

நிரவியில் டிஐஜி தலைமையில் இன்று குறைதீா் கூட்டம்

நிரவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.23) புதுவை டிஐஜி தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. புதுவை காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) சத்தியசுந்தரம் தலைமையில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இந்த கூட்ட... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு தேசிய ஒற்றுமை விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். தஞ்சாவூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆக.19-ஆம் தேதி நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால்: ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து டீ கடைக்கு செல... மேலும் பார்க்க