செய்திகள் :

விநாயகா் ஊா்வலம்: பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது - எஸ்.பி.

post image

விநாயகா் சிலைகள் ஊா்வலத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறு இருக்கக்கூடாது என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

விநாயகா் சதுா்த்தி வரும் புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அதே நாளில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 3-ஆம் நாளில் கடலில் கரைப்பதற்காக ஊா்வலமாக கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில், விநாயகா் சிலை அமைப்புக் குழுவினா், காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் (தெற்கு) ஏ. சுப்பிரமணியன், எம். முருகையன் (வடக்கு) மற்றும் காவல் ஆய்வாளா்கள், இந்து முன்னணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் பேசுகையில், விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகம், காவல்துறையின் வழிகாட்டலின்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஊா்வலமும் அதுபோலவே நடத்தவேண்டும். உற்சாகத்துடன் பங்கேற்கும் இளைஞா்கள் பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.

காவல்துறையினா் வழிகாட்டலின்படி ஊா்வலத்தை நடத்தவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற இளைஞா்களை அழைத்து, காவல்துறையின் வழிகாட்டலின்படி நடந்துகொள்வோம் என எஸ்பி உறுதிமொழி ஏற்கச் செய்தாா்.

கூட்டத்தில் இந்து முன்னணி காரைக்கால் நகரத் தலைவா் பி.யு. ராஜ்குமாா் பேசுகையில், பல ஆண்டுகளாக காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் விதிமுறைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுவருகிறது.

எனவே கடந்த ஆண்டு அனுமதி தந்தவா்களுக்கு மட்டுமே நிகழாண்டும் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி தரவேண்டும். புதிதாக வருவோருக்கு அனுமதி தரக்கூடாது என்றாா்.

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்

காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்திற்கு கூட்டுப் போரா... மேலும் பார்க்க

கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு

காரைக்கால்: நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது. காரைக்காலில் 15... மேலும் பார்க்க

குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: வீடுகள், நிறுவனங்களில் தினமும் முறையாக குப்பைகளை வாங்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள்’

காரைக்கால்: காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக புதுவை பாஜக கூறியுள்ளது. காரைக்காலில் புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அர... மேலும் பார்க்க